Wednesday, April 29, 2009

தொழிலார்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டு தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடுவதன் மூலமே எமது தொழிற்சங்க உரிமைகளை பெற முடியும்.

மலையக தொழிற்சங்கங்கள் அரசியல் மயமாக்கப்படுவதால் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. இதனால் தான் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகியும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு இன்றுவரை பெற்றுக் கொடுக்க முடியாத நிலை தொழிற் சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சருமான எஸ்.அருள்சாமி அக்கரப்பத்தனையில் தோட்ட தமிழ் தலைவர்களை சந்தித்து உரையாற்றும் போது தெரிவித்தார். தொழிற்சங்கவாதிகள் தங்களை அரசியலில் வளர்த்துக் கொள்வதாலும் தொழிற்சங்க போட்டிகளுக்கும், பணத்திற்காக விலைபோகும் படலமும் தொடர்வதாலே தொழிற்சங்க உரிமைகளை பெற முடியாமல் இருக்கின்றது என்றார். தொழிலார்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டு தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடுவதன் மூலமே எமது தொழிற்சங்க உரிமைகளை பெற முடியும். மாறாக அரசியல் மாயைகளுக்காக தொழிற்சங்கங்களை கூறு போடுவதால், தொழிற்சங்க போட்டிகள் வளருமே தவிர தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட மாட்டாது.

No comments: