Wednesday, April 29, 2009

தோட்டப்பகுதிகளில் எல்லைப்புற காணிகளை வெளியார் ஆக்கிரமிப்பு

களுத்துறை மாவட்டத்தின் சில தோட்டங்களில் எல்லைப்புறங்களில் உள்ள காணிகளை பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் படிப்படியாக ஆக்கிரமிப்புச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யும் காணிகளில் தேயிலை, தென்னை, வாழை மற்றும் ஏனைய பயிச்செய்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சிலர் இக்காணிகளுக்கான உறுதிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகங்கள் இவ்விடயம் பற்றி தெரிந்திருந்தபோதிலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேவேளை காலம் காலமாக தோட்டங்களின் அபிவிருத்திக்காக பாடுபட்டுவரும் தொழிலாளர்கள் தாம் வசித்து வரும் லயன் குடியிருப்புக்களில் மேலதிக வசதிகளை செய்து கொள்ளும் போதும், தற்காலிக குடிசைகள் அமைத்துக் கொள்ளும் போதும் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக கெடுபிடிகளை மேற்கொள்வதுடன் வேலையிலிருந்து இடைநிறுத்தி நீதிமன்றம் வரை கொண்டு சென்று தொழிலாளர்களுக்கு பெரும் இக்கட்டான நிலைமையை தோட்ட நிர்வாகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

No comments: