Friday, March 27, 2009

ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே சமூகம் முன்னேற்றமடையும்

ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே மலையக சமூகத்தை முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் எமது மக்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என பதுளை, ஆலி-எல பகுதி பெருந்தோட்டங்களின் தோட்டக்கமிட்டி முக்கியஸ்தர்கள் மத்தியில் பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அதன் பிரகாரம் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

ஊவா மாகாணசபை கே. விஸ்வநாதன் குறிப்பிடுகையில் தேயிலை தோட்டங்களில் 10 வீதமான பங்குகள் தொழிலாளர்களிடம், 30 வீதமான பங்குகள் தோட்டங்களை பொறுப்பேற்ற நிறுவனங்களிடமும், 40 வீதமான பங்குகள் அரசிடமும் இருந்து வருகிறது.

அரசினால் தோட்டங்களை நடத்த முடியாது நட்டத்தில் இயங்கியதால் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. தோட்ட நிறுவனங்கள் நடத்த முடியாத பட்சத்தில் அடுத்த பங்குதாரர்களான தொழிலாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
கம்பனிகள் பொறுப்பேற்றது முதல் தோட்டங்களின் வளங்கள் அனைத்துமே சுரண்டப்பட்டு விட்டன. அத்துடன் ஏக்கர் ஒன்றிற்கு 3500 தேயிலைச் செடிகள் இருக்க வேண்டிய இடத்தில் 1500- 2000 தேயிலைச் செடிகளே உள்ளன என்றார்
.

No comments: