Saturday, March 28, 2009

விவசாயத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து இடைநிறுத்தம்

பொகவந்தலாவை கெம்பியன் தோட்ட 57ம் பிரிவிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், அவர்களுடைய உறவினர்களும் தோட்டங்களில் வேலை செய்வதிலிருந்து தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தி வைத்துள்ளனர் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தமது மேலதிக வருமானத்துக்காக தோட்டங்களிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: