Thursday, February 11, 2016

மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை தடுப்பவர்கள் சமூகத்துரோகிகளாவர்

மலை­ய­கத்­திற்­கென்று தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது காலத்தின் தேவை­யாகும். இதனை தடுக்க நினைப்­ப­வர்கள் சமூ­கத்தின் துரோ­கி­க­ளாவர் என்று பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன்  மலை­ய­கத்­திற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழ­க­மொன்று அவ­சி­யம்­தானா? என்பது தொடர்பாக கருத்துக்கேட்ட போது இவ்வாறு தெரிவித்தார்

அவர்  மேலும் தெரி­விக்­கையில், மலை­ய­கத்­திற்கு தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வதன் அவ­சி­யத்தை நான் கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்கும் மேலாக வலி­யு­றுத்தி வரு­கின்றேன். இது தொடர்­பாக அர­சி­யல்­வா­தி­க­ளையும் தெளி­வு­ப­டுத்தி இருக்­கின்றேன். மலை­ய­கத்தைச் சேர்ந்த பல புத்­தி­ஜீ­வி­களும் இதனை வர­வேற்றுப் பேசி­யுள்­ளனர். அமரர் பெ.சந்­தி­ர­சே­க­ர­னினால் கடந்த காலத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆலோ­ச­னைக்­கு­ழுவும் இது பற்றி தீவி­ர­மாக ஆராய்ந்­தது. இந்­நி­லையில் பல்­க­லைக்­க­ழக நிலை­மாறி பல்­க­லைக்­க­ழக கல்­லூரி தொடர்­பிலும் இப்­போது கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும்.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழகம் மற்றும் கிழ­ககு பல்­க­லைக்­க­ழகம் போன்று மலை­ய­கத்­திற்கு தனி­யான ஒரு பல­்க­லைக்­க­ழகம் தேவை என்­ப­தனை பெரும்­பான்மை சிங்­க­ளவர், சிங்­கள மக்கள் கூட எதிர்க்­க­வில்லை. எனினும் மலை­ய­கத்தைச் சேர்ந்த சில விஷ­மிகள் இதனை எதிர்த்து வரு­கின்­றனர். இன ரீதி­யாக பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­வது பாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்றும் இவர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர். இத்­த­கை­யோரை மலை­யக சமூ­கத்தின் துரோ­கி­க­ளா­கவே கருதவேண்டி இருக்­கின்­றது. இவர்கள் தமது நிலை­யினை மாற்றிக் கொண்டு சமூக முன்­னேற்றம் கருதி செயற்­பட வேண்டும்.

மலை­ய­கத்­துக்­கென்று தனி­யாக ஒரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மானால் மலை­யக சமூ­கத்தின் இனத்­துவ அடை­யாளம் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு மேலும் பல நன்­மை­களும் உரு­வாகும் நிலை ஏற்­படும். மலை­யக நாட்டார் பாடல்கள், மலை­யகக் கல்வி, மலை­யக கலா­சாரம், மலை­யக சிந்­தனை, மலை­யக பாரம்­ப­ரியம் என்ற ரீதியில் மலை­யகம் தொடர்­பான பல்­வேறு இனத்­துவ அடை­யா­ளங்­க­ளையும் தனி­யா­ன­தொரு பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு உரு­வாகும்.

காமன் கூத்து உள்­ளிட்ட மேலும் பல தனித்­து­வ­மான விட­யங்­களை வேறு பல்­க­லைக்­க­ழக செயற்­பா­டு­களின் ஊடாக நாம் எதிர்­பார்க்க முடி­யாது. அதே­வேளை மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்தின் மூல­மாக இத்­த­கைய விட­யங்­களை நாம் உள்­வாங்கிக் கொள்­ளவும் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளவும் முடியும் என்­ப­த­னையும் குறிப்­பிட்டுக் கூற வேண்­டி­யுள்­ளது. மேலும் மலை­யகம் தொடர்­பான கற்கை நெறி­க­ளை நாம் மலை­ய­கத்­திற்­கென்று தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­படும் பட்­சத்தில் ஏற்­ப­டுத்திக் கொள்ள முடியும். சமூக அபி­வி­ருத்­திக்கு இத்­த­கைய நிலை­மைகள் பெரிதும் உந்து சக்­தி­யாக அமையும் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை.

தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நட­வ­டிக்­கைகள் தாம­த­மாகும் சந்­தர்ப்­பத்தில் தனி­யான பல்­க­லைக்­க­ழக கல்­லூரி ஒன்­றினை மலை­ய­கத்­துக்­கென்று அமைப்­பது தொடர்பில் கவனம் செலுத்­து­வதில் தப்­பில்லை. ஆனாலும் கல்­லூ­ரியைக் காட்­டிலும் தனி­யான பல்­க­லைக்­க­ழ­கமே காலத்தின் தேவை­யாகும் என்­ப­தனை யாரும் மறந்து விடக்­கூ­டாது.

தனி­யான பல்­க­லைக்­க­ழகம் மலை­ய­கத்­துக்­கென்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது தொடர்பில் மலை­யக அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள் உள்­ளிட்ட சகல தரப்­பி­னரும் ஒன்­று­பட்டு குரல் கொடுக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இவ்விடயத்தில் களையப்படுதல் வேண்டும்.
ஏனைய சமூ­கங்­களைப் போன்று நாம் பல்­வேறு வெற்றி இலக்­கு­க­ளையும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு தனி­யான பல்­க­லைக்­க­ழகம் வாய்ப்­ப­ளிக்கும் என்­பது உறு­தி­யாகும். வீணான சாட்­டுக்­களைக் கூறி தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்கும் நிலைமை இழுத்­த­டிக்­கப்­ப­டு­மானால் எதிர்­கால சந்­த­தி­யினர் நிச்­சயம் பழி சொல்வர் என்­ப­த­னையும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். சிந்தித்து செயல்படுவோம் என்றார்.

No comments: