Monday, August 29, 2016

தோட்டத் தொழி­லா­ளர்கள் பக­டைக்­காய்­களா?


சம்­பள விவ­கா­ரத்தில் தோட்டத் தொழி­லா­ளர்­களை அர­சி­யல்­வா­தி­களும் தொழிற்­சங்­க­வா­தி­களும் பக­டைக்­காய்­க­ளாக்கி விளை­யா­டு­கின்­றனரா என இலங்கை தேசிய தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் இரா.தங்­கவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில், 2015ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி கூட்டு ஒப்­பந்­தத்தில் விதிக்­கப்­பட்ட நிபந்­த­னைக்கு ஏற்ப ஏற்­க­னவே முடிவு செய்த சம்­பளத் தொகை மீள்­ப­ரி­சீ­ல­னைக்­கான காலம் முடி­வ­டைந்து கூட்டு ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அடிப்­படை கார­ணி­க­ளுக்கு அமை­வாக புதிய சம்­பள நிர்­ணயம் இது­வ­ரை­காலம் இழுத்­த­டிப்­ப­தற்கு முக்­கிய காரணம் தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும், அவர்­க­ளுக்கு உந்துசக்­தி­யாக செயல்­ப­டு­கின்ற போலி தொழிற்­சங்­கங்­க­ளு­மே­யாகும்.

ஒவ்­வொரு முறையும் சம்­பளப் பேச்சு வார்த்­தையின் போதும் தொழி­லா­ளர்கள் சார்பில் முன்­வைக்­கப்­பட்ட நியா­ய­மான சம்­பளக் கோரிக்­கை­களைத் தட்டிக் கழிப்­ப­தையே தமது செயற்­பா­டாக முன்­னெ­டுத்து வந்­தது கண்­கூடு.

இது ஒன்றும் தொழிற்சங்­கங்­க­ளுக்கோ தொழி­லா­ளர்­க­ளுக்கோ புதிய அனு­பவம் அல்ல. மாறாக தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தி­னதும், சில முத­லா­ளி­மார்­க­ளதும் கொள்ளை இலா­பத்தைக் குறி­வைத்தே செயற்­ப­ட­ுவது முத­லா­ளி­மார்­க­ளது ஆதங்கம் என்­பது அனை­வரும் அறிந்­ததே.

அதே போன்று தொழி­லா­ளர்கள் பெற்ற சம்­பள உயர்வு அனைத்­துமே போராடிப் பெற்­றதே என்­பது மறுக்­கவோ மறைக்­கவோ முடி­யாத வர­லாற்று உண்மை.

ஆனால் இந்த முறை தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் செயற்­பா­டு­க­ளுக்கும் அதன் விடாப்­பி­டித்­தன்­மைக்கும், முரட்டுப் பிடி­வா­தத்­திற்கும் பின்­ன­ணியில் மலை­யக தொழிற்­சங்­க­வா­திகள் என்று தம்மைக் கூறிக் கொண்டு தோட்டத் தொழி­லா­ளர்­களின் நியா­ய­மான கோரிக்­கைக்கு முட்­டுக்­கட்­டை­யாக திகழ்­வது குரோத அர­சியல் தொழிற்­சங்க கோட்­பாட்டைக் கொண்ட சக்­தி­க­ளே­யாகும்.

இச்­சக்­திகள் இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஆயிரம் ரூபா சம்­பளக் கோரிக்­கையை தோட்ட முத­லா­ளிமார் ஏற்­றுக்­கொண்டால் தமது கையா­லாகத் தன்மை வெளிப்­பட்­டு­விடும், அதே நேரத்தில், தொழி­லாளர் சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு தாம் தடை­யாக உள்ளோம் என்ற உண்மை வெளிப்­பட்டு விடுமே என்­பதே மூலக்­கா­ரணம்.

இந்த சக்­திகள் மலை­யக வர­லாற்­றி­லேயே அனைத்து சம்­பள உயர்­வு­க­ளையும் பெற்றுக் கொடுத்­தது இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் என்ற உண்­மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதே­வேளை இ.தொ.காங்­கி­ரஸின் கோரிக்­கை­க­ளுக்கு வர­லாற்று ரீதி­யாக முட்­டுக்­கட்டை போட்ட சக்­தி­க­ளையும் அவர்­க­ளது முக­மூ­டிகள் அவ்­வப்­போது கிழிக்­கப்­பட்­டன என்­ப­தையும் புரிந்து கொள்ள வேண்டும். எது எப்­படி இருந்த போதிலும் கடந்த 26 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் முன்­வைத்த சம்­பளக் கோரிக்கை மிக நியா­ய­மா­னதும், தொழி­லா­ளர்­களின் இன்­றைய பொரு­ளா­தார நிலைப்­பாட்டை மாத்­தி­ர­மன்றி, தோட்­டங்கள் தமது பொரு­ளா­தார வனப்­பையும் எதிர்­கால வளர்ச்­சி­யையும் மைய­மாகக் கொண்டே முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை என்­ப­தையும், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளி­னதும், தோட்டத் தொழிற்­சங்­கங்­க­ளி­னதும் அக்­கறை கொண்ட அனை­வரும் ஏற்றுக் கொள்­வார்கள் என்­பது எமது உறு­தி­யான நம்­பிக்கை.

எனவே இந்த தொழிற்­சங்க கூட்டு ஒப்­பந்த பேச்சுவார்த்­தையை முன்­னெ­டுப்­ப­தற்கு வகை செய்யும் விதத்தில் தொழில் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. சென­வி­ரட்ன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தலை­யிட்டு முட்டுக் கட்­டையை தகர்ப்பதற்கு ஆக்­க­பூர்­வ­மான முறையில் செயற்­பட வேண்டும்.

இல்லை என்றால் மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள நியாயமான சம்பளக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு, தொழி

லாளர்கள் எப்படி இந்த அரசை ஆட்சி யில் அமர்வதற்கு எவரது சிபாரிசும் வழிகாட் டலும் இன்றி செயற்பட்டார்களோ அதே போன்று இந்த ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கும் வழமை யான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப டும் எனவும் தெரிவித்தார்.

No comments: