Friday, May 13, 2016

மலையகத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்


ஜனாதிபதி மதுபான நிவாரணப் பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மது பாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம், கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தி அவர்களூடாக மக்களுக்கு அறிவுறுத்தும் செயற்திட்டம் 11-05-2016 கொத்மலை நகர மைதானத்தில் நடைபெற்றது. 

இதற்கு ஜனாதிபதி செயலகத்தின் மதுபான நிவாரணப் பிரிவின் அதிகாரிகள், கொத்மலை பிரதேச செயலாளர், மதுவரி திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, பொலிஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள், கல்வி அதிகாரிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். 

மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அதிதிகளின் உரையும் வீதி நாடகமும் நடைபெற்றது. 

தொடர்ந்து அரச ஊழியர்களினால் கொத்மலை சந்தைத் தொகுதி வர்த்தக நிலையங்களில் மது ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. 

இந்த ஊர்வலம் கொத்மலை நகரில் ஆரம்பித்து தவலந்தன்ன நகரம் வரை சென்றது. 

இச் செயற்திட்டம் போதை தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக மக்கள் தொடர்பு அதிகாரி நளின் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. 

No comments: