Wednesday, November 11, 2015

இழு­பறி நிலை கூட்டு ஒப்பந்தம் தாமதத்துக்கு காரணம்

முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்திற்கும் பெருந்­ தோட்ட தொழிற்­சங்­க­ளுக்கும் இடை­யே­யான இழு­பறி நிலை கார­ண­மா­கவே தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டு­வது கால தாம­த­மா­வ­தாக தெரி­வித்த அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வுக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
 
கொழும்பு டார்லி வீதி­யி­லுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் தொடர்­பான அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
 
பெருந்தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளம் இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் தோட்ட தொழிற்­சங்­கங்­களும் இணைந்து கையெ­ழுத்­திடும் கூட்டு ஒப்­பந்­தத்தின் மூலமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.
 
டந்த மார்ச் 31 ஆம் திகதி இந்தக் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யா­கி­விட்­டது. இந்­நி­லையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம், தோட்டத்தொழி­லாளர் சங்­கங்கள் மற்றும் தேசிய ஊழியர் ஆலோ­சனை சபை­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.
 
நானும் இப்­பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்டேன். இதன்­போது தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்டும் என தொழிற்­சங்­கங்கள் வலி­யு­றுத்­தின.
 
ஆனால் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் இக் கோரிக்­கைக்கு தமது கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்­டது. 620 ரூபா வழங்­கு­வ­தற்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இணக்கம் தெரி­வித்­தது.
 
இதனை தொழிற்­சங்­கங்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இதன்­போது 770 ரூபா சம்­பள உயர்வு தொடர்­பி­லான யோச­னையை நான் முன் வைத்தேன்.
 
ஆனால் இது­வ­ரையில் இத்­தொகை தொடர்பில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் தொழிற்­சங்­கங்­களும் இணக்­கப்­பாட்­டுக்கு வராது இழு­பறி நிலை­யி­லேயே உள்­ளது. எனவே தான் தோட்டத்தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டு­வது காலதாம­த­மா­கி­யுள்­ளது.
 
இவ் ­வி­டயம் தொடர்பில் இரு தரப்பினரிடமும் இணக்கப்பாட்டுக்கு வருமாறு நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இணக்கப்பாடு காணப்படாததனாலேயே தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

நன்றி- வீரகேசரி

 

No comments: