Saturday, October 24, 2015

தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறுவதில் உண்மை இருக்கிறதா

கம்­ப­னி­களின் அடக்­கு­முறை கூட்டு ஒப்­பந்த விட­யத்­திலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. தோட்­டங்கள் நட்­டத்தில் இயங்­கு­வ­தாக காரணம் காட்டி தொழி­லாளர் சம்­பள உயர்வு விட­யத்தில் கம்­ப­னிகள் இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்­றன. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பதில் எந்­த­ள­வுக்கு உண்­மை­யுள்­ளது எனத்தெரியவில்லை என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரி­வித்தார்.
இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கு­ரிய சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென்று பிர­தமர் தனது கரி­ச­னையை வெளிப்­ப­டுத்தி இருக்­கின்றார். இந்­நி­லையில் இவ்­வி­டயம் தொடர்பில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியும் அர­சாங்­கத்­துக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் அழுத்தம் கொடுத்து வரு­கின்­றது
 
கம்­ப­னி­களின் அடக்­கு­முறை கூட்டு ஒப்­பந்த விட­யத்­திலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. தோட்­டங்கள் நட்­டத்தில் இயங்­கு­வ­தாக காரணம் காட்டி தொழி­லாளர் சம்­பள உயர்வு விட­யத்தில் கம்­ப­னிகள் இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்­றன. இதில் எந்­த­ள­வுக்கு உண்­மை­யுள்­ளது என்­பது தொடர்பில் சிந்­திக்க வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது. தேயிலை என்­பது விவ­சா­யத்­துடன் தொடர்­பு­டைய ஒன்­றாகும். விவ­சா­யத்தில் விளைச்சல் என்­பது இயற்­கை­யா­னது. இலா­பமும் நட்­டமும் மாறி மாறி வரும். தொடர்ந்து இலாபம் கிடைக்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. விவ­சாயப் பொருட்­க­ளுக்கு விலைத்­த­ளம்­பல்கள் இருப்­பதும் இயற்­கை­யாகும். இதனை புரிந்தும் புரி­யா­த­வாறு செயற்­படும் கம்­ப­னி­யினர் நட்டம் ஏற்­பட்டு விட்­ட­தாக கூக்­குரல் இடு­கின்­றனர். கம்­ப­னி­யி­னரின் அடக்கு முறையே இதில் வெளிப்­ப­டு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. கம்­ப­னி­யினர் சாட்­டு­களை கூறி சம்­பள உயர்வு விட­யத்தை மழுங்­க­டிக்கச் செய்­வது எவ்­வி­தத்­திலும் நியா­ய­மில்லை.
 
இதே­வேளை தமது அமைச்சு விட­யங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கொன்று அண்­மையில் எமது மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் வி.இரா­தா­கி­ருஷ்ணன் பிர­த­மரை சந்­தித்­துள்ளார். இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்டும் என்ற தனது கரி­ச­னையை வெளி­ப்ப­டுத்தி இருக்­கின்றார். தொழி­லா­ளர்­களின் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு பரி­கா­ர­மாக உட­ன­டி­யாக சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
 
கம்­ப­னி­யி­னரின் கெடு­பி­டி­களை விரைவில்முடி­வுக்கு கொண்டு வந்து தொழிலாளர்க ளுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க சகல தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்துடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நிலுவைத் தொகையும் தொழிலாளர்களுக்கு உரிய வாறு வழங்கப்பட வேண்டும் என்றார்.

No comments: