Wednesday, August 27, 2014

தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான 4 தோட்ட பிரிவுகளை சேர்ந்த சுமார் 1000ற்கும் அதிகமாக தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை முதல் மஸ்கெலியா தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டங்களில் கடமையாற்றும், தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரிக்கைவிடுத்து, தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தோட்ட அதிகாரி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்தவர் எனவும் அவர் சிறந்த முறையில் தனது கடமைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரை இடமாற்றம் செய்வதனை ஏற்றுகொள்ள முடியாது என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டடுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் மேற்படி தோட்ட அதிகாரியை அவரின் தனிப்பட்ட காரணத்திற்காக இடமாற்றம் செய்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments: