Friday, January 10, 2014

பெருந்தோட்ட நிர்வாக நிலங்கள் யாவும் அரசுடமை தொழிலாளர்கள் சொந்தம் பாராட்ட முடியாது

பெருந்தோட்டத்துறை நிர்வாகத்திலுள்ள விவசாய மற்றும் தரிசு நிலங்கள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள், தோட்டப்பணியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சொந்தம் பாராட்டுவதோ, விவசாய பணிகளில் ஈடுபடுவதோ நீதிக்கு புறம்பானது என நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜித குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாவலப்பிட்டி பிரதேசம் போஹில், கிறீன்வூட், ருவன்புர, வெரலபத்தன சார்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தாங்கள் சார்ந்த தொழிற்சங்க பிரமுகர்கள் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், எம். மோகன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.எம். கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர் கெஹல்தெனிய ) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திந்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இவர்கள் இங்கு தெரிவிக்கையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தரிசு நிலம் காணியில் எங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் பற்றாக்குறைக்குமே இந்த தரிசு நிலத்தில் மா, பலா, தேயிலைச்செடி, கால்நடை வளர்ப்பு முதலியவற்றை பெரும்பான்மை இனத்தவர்களுடன் சேர்ந்து மேற்கொண்டு வருகிறோம். 2012ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தரிசு நிலத்தில் விவசாயம் செய்வோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
;. 
இதே­வேளை, மாதத்தில் 15 நாட்கள்    கூட தோட்டங்களில் தொழில் வழங்கப்படுவதில் நாளாந்த வாழ்வில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே இதனை செய்து வருகிறோம். சுpறிய ரக விவசாயிகளுக்கு சார்பாக மக்கள் நலன் காப்பதாக வெற்றி ஆரவாரம் ஏட்டளவிலேயே உள்ளது. அது பேரினப் பொருளாதாரக் கொள்கையாகவே காணப்படுகிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 
தேர்தல் காலங்களில் உறுதியளித்த எந்தவொரு திட்டமும் இன்றுவரை செயல்முறைப்படுத்தப்படவில்லை. கொள்கைப் பொதிகளை கட்டவிழ்த்து சூறையாடப்படுகின்றதே தவிர எங்களைப் போன்ற தொழிலாளர் வர்க்கத்தினருக்கு பாரபட்சமே எஞ்சியுள்ளது என பலரும் தெரிவிக்கின்றனர்

No comments: