Tuesday, January 8, 2013

கண்டி, மாத்தளையில் தொழிற்சங்க செயற்பாடுகளை விரிவு படுத்த இ.தொ.கா. நடவடிக்கை

கண்டி,மாத்தளை மாவட்டத்தின் தொழிற்சங்க மற்றும் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தி செயற்படுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள,கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கண்டி வை.எம்.பி.ஏ.பிரதான மண்டபத்தில் மாநில கமிட்டிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டன.அரச பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள், கொடுப்பனவுகள் சம்பந்தமாகவும் வருகை தந்திருந்தோர் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

No comments: