Wednesday, April 27, 2011

கினிகத்தேனை லொறி விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அட்டன் - கினிகத்தேனை பிரதான பாதையில் கடவத்தை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில் 27-04-2011 அதிகாலை 1.10 மணியளவில் சுமார் 150 அடி பள்ளத்தில் லொறி ஒன்று விழுந்ததில் ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து மரக்கறி வகைகளை ஏற்றி வந்த இந்த லொறி பாதையை விட்டு விலகி பள்ளத்தில் புரண்டுள்ளது. இதன் பின்பு அயலவர்கள் கினிகத்தேனை பொலிஸாருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட போது படுகாயமடைந்த நிலையிலிருந்த மூவரை மீட்டு கினிகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அக்கரப்பத்தனையைச் சேர்ந்த 31 வயதுடைய முருகையா ஜெயரத்னம் என்பவரே உயிரிழந்தவராவார். படுகாயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments: