Monday, March 21, 2011

மலையக மக்கள் மின்சாரம் பெற சலுகை

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள உள்ள மக்கள் மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு தோட்ட நிர்வாகத்தின் கடிதம் அவசியமில்லை என மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தாலே போதுமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2012 ஆண்டுக்கு முன்னதாக தோட்டங்களில் குடியிருக்கும் சகலருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை பூர்த்திசெய்யவும், நாடு தழுவிய ரீதியில் 4ஆயிரத்து 500 கிராமங்களில் 4ஆயிரத்து 500 மின்மாற்றிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தீவுகள், மலைப் பிரதேசங்கள், வெகு தொலைவிலுள்ள கிராமங்களுக்கு ஆகிய பகுதிகளில் வாழும் வசதிகளற்ற 40 ஆயிரம் குடும்பங்களுக்கு சூரிய சக்தி, காற்றலை மின் உற்பத்தி மற்றும் சிறிய நீர்வீழ்ச்சிகள் மூலம் மின் இணைப்புகள் வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments: