Monday, February 21, 2011

வேலைநிறுத்தப் போராட்டத்தில் 400 தொழிலாளர்கள்

பொகவந்தலாவை கொட்டியாக்கலை மத்திய பிரிவைச்சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் இன்று (21-02-20011) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆண் தொழிலாளர்களுக்கு உரிய தொழிலை வழங்காமல் தொடர்ந்து கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபடுமாறு தோட்ட நிருவாகம் வலியுறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்ப் போராட்டத்தை மேற்கொள்வதாக தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கொட்டியாக்கலைத்தோட்ட நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தொழிலாளர்களின் கோரிக்கைக்கேற்ப ஆண் தொழிலாளர்களுக்கு கொழுந்து பறிப்பதைத் தவிர்த்து ஏனைய தொழிலினை வழங்குவதற்கு தோட்ட நிருவாகம் சம்மதித்தபோதும் குறிப்பிட்ட தொழிலாளர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்து இன்று தொழிலுக்குச் சமுகம் தரவில்லை என்று கொட்டியாக்கலைத் தோட்ட நிருவாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: