Wednesday, February 16, 2011

மலையகத்தில் 31,000 வீட்டுத்தோட்டங்கள் அமைக்கத் திட்டம்

உலக உணவுப் பற்றாக்குறை எதிர்வரும் ஆண்டில் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய மலையகத்தில் 31,000; வீட்டுத் தோட்டங்களை 550 இலட்ச ரூபா செலவில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலையக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அமரநந்தன வீரசிங்க தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் 3,500 வீட்டுத் தோட்டங்களும் பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் 6,700 வீட்டுத் தோட்டங்களும், ஹரிஸ்பத்துவ பிரதேச செயலகப்பிரிவில் 8,400 வீட்டுத் தோட்டங்களும், கலகெதர பிரதேச செயலகப்பிரிவில் 5,700 வீட்டுத் தோட்டங்களும், ஹத்தரலியத்த பிரதேச செயலகப் பிரிவில் 6,700 வீட்டுத் தோட்டங்களும் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: