Wednesday, July 28, 2010

தோண்டியெடுக்கப்பட்ட சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில்தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவக்கச்சேரி, ஊhகாவற்துறை யாழ்ப்பாணம், ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இச் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இப் பெண்ணின் மரணத்திற்கு இதே வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவரே காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: