Monday, September 7, 2009

ஆயிரக்கணக்கான கிலோ தேயிலை அரைக்கப்படாமல் தேக்கம்

பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடர்கின்றதைத் தொடர்ந்து தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் அரைக்கப்படாத நிலையில்,ஆயிரக்கணக்கான கிலோ தேயிலை கொழுந்துகள் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 500 ரூபா ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே இந்த ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்று வருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 290 ரூபா நாளாந்த ஊதியமாக வழங்கப்படுகிறது.

No comments: