Wednesday, May 27, 2009

ஆசிரியர்களில் தங்கியிருக்கும் சமூகத்தின் விடிவு

மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள், குருவிற்கு பின்னர்தான் தெய்வம் எனும் முதுமொழி யும் உண்டு. குருவை தெய்வமாக மதிக்க வேண்டும். தெய்வம் என்பது சாதி, மதம், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற எந்த வேற்றுமையையும் பார்ப்பதில்லை. ஆசிரி யர்கள் மாணவர்களை எவ்வகையிலும் வேறுபாடு காட்டாது அனைத்து மாணவர்களையும் சமமாக மதித்து கற்பிக்க வேண்டும். பாடசாலைக் கல்வியைத் தொடங்கும் ஒவ்வொரு மாண வனும் குறைந்தது 05 முதல் 17 வருடங்கள் ஆசிரியர்களின் கண்காணிப்பிலும் அவர்களின் வழி காட்டல், ஆலோசனையிலுமே வாழ்க்கை வட்டம் சுழல்கிறது.
இவ்வாறு தொடரும் மாணவர்களின் கற்றலானது எங்கேனும் இடைநிறுத்தப்படும்போது அம் மாணவனின் வாழ்க்கையே திசைமாறிப் போகின்றது. குறிப்பாக பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்கள் பலர் வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள். ஆரம்ப வகுப்புக்களில் சேரும் அனைத்து மாணவர்களும் உயர்தரம் வரையில் கல்வியைத் தொடர்வதில்லை. மலையகப் பெற்றோர் மத்தியில் தமது பிள்ளைகளின் கல்வியின் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய போதுமான அறிவு இல்லையென்றே கூறவேண்டும். இதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. ஆனால் இந்தச் சூழலிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மிகவும் சமூகப் பொறுப்புடனும் கடமையுணர்வுடனும் கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.
பெருந்தோட்டப் பகுதி மாணவர்களைப் பார்த்தால் அவர்களின் முகங்களில் ஒருவித ஏக்கம் புரையோடியிருப்பதை அவதானிக்கலாம். அம்மாணவர்கள் கற்று எதிர்காலத்தில் நல்ல உத்தி யோகம் பார்க்க வேண்டுமென்ற நீண்ட கனவுகளுடன் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் சூழுலும் வறுமையும் அவர்களின் சிந்தனைகளைச் சிதறடித்து விடுகின்றன.
வறுமை காரணமாக சில பெற்றோர் சிறுவயதிலேயே நகர்ப்புறப் பகுதிகளுக்கு வீட்டு வேலை களுக்கு அனுப்புகின்றனர். பிள்ளைகள் படித்து என்ன தோட்டத் துரை வேலையாக கிடைக்கப் போகிறதென கேள்வியெழுப்பும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஒரு சமூகத்தில் வறுமை தலைவிரித்து ஆடும்போது அவர்களால் படிக்கவோ,சிந்திக்கவோ நல்ல செயற்பாடுகளில் விரும்பிச் செயற்படவோ முடியாது என்பதை பலர் உணரத் தவறிவிடுகின்றனர். பாடசாலையில் பலதரப்பட்ட திறமை களையுடைய மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை இனங்கண்டு அதற்கேற்றவாறு ஆசிரியர் கள் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் தாம் படும் கஷ்டங்கள் தமது பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது என எண்ணும் பெற்றோர் தம் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக வெயில், மழை, குளிர் எதனையும் பாராது கடுமையாக உழைக்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளை வாழ்க்கையில் நல்ல நிலைக்கு இட்டுச் செல்லும் பொருட்டு அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவி வருகின்றனர்.
பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கு பெற்றோரின் பங்களிப்புடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் தொட்டு உயர்தரம் வரையிலான அனைத்து பரீட்சைகளுக்கும் அவர்களை சிறப்பான முறை யில் தயார்ப்படுத்துவதில் ஆசிரியர் வகிக்கும் பங்கு அளப்பரியதாகும். மாணவர்களை பரீட்சை க்குத் தயார்ப்படுத்தி அவர்களை சிறப்பான முறையில் சித்தியடையச் செய்ய வேண்டியது ஒவ்வொரு ஆசிரியனதும் கடமையுமாகும். கல்வியில் சிறந்து வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வரும் மாணவர்கள் தமக்கு கற்பித்த ஆசிரியரை என்றும் மறந்து விடக்கூடாது. மலையகத்தில் அறிவொளிகளாக வாழ்ந்தவர்களை இனங்கண்டு அவர்களை மாணவர்கள் கௌரவிக்க வேண்டும்.
காலத்திற்கு காலம் பாடத்திட்டங்கள் மாறலாம்.அவ்வாறான சூழ்நிலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், மொழி போன்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் கூடிய சிரத்தை எடுத்து கற்பிக்க வேண்டும். எமது சமூகம், எமது மாணவர்கள், இவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு கல்வி மட்டுமே ஒரு முலதனமாகும். எனவே ஆசிரியர்கள் இம்மூலதனத்தை சிறப்பான முறையில் இடவேண்டும்.
அதிபர்கள் ஆசிரியர்களை இனங்கண்டு அந்தந்த பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திறமையுள்ள ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்பார்வை செய்ய வேண்டும். மாணவர்களின் கற்றல் நடவடிக் கைகளை உறுதி செய்வதுடன் ஆசிரியர்களுக்கான பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிகளில் பங்களிப்புச் செய்தவற்கு ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
அதிபர் என்ற முறையில் பாடரீதியான வளவாளர்களையும் ஆசிரிய ஆலோசகர்களையும் நலன் விரும்பிகள், புத்திஜீவிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் இணைத்துக் கொண்டு பாடசாலை நிர்வாகத்தை நடத்தி செல்ல வேண்டும்.
ஆசிரியர் பணியே அறப்பணி. அதற்கு உன்னை அர்ப்பணி"
ஆசிரியர் ஒரு சமூகத்தின் கண்ணாடியாகும் அவர்களின் கையில்தான் ஒரு சமூகத்தின் விடிவும், வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கிறது. இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் தனது பணியை செவ்வனே செய்ய வேண்டியது அவசியமாகும்.
சிவமணம்
நன்றி- தினகரன்

Tuesday, May 26, 2009

அரச பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை

அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொள் வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் கூட்டு ஒப்பந்தம் காலாவதி யானதால் சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுலுக்கு வருவதாகவிருக்க வேண்டும் என்பதையும் முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்கள் ஆரம்ப காலங்களில் மிகவும் நல்ல முறையில் இயங்கிவந்த போதும் தற்போது முறையாகப் பராமரிக்கப் படாமல் சீரழிந்த நிலையில் அவை தற்போது காடுகளாகியுள்ளன. இத் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து மாதாமாதம் அறவிடப் படும் சேமலாப நிதியைக் கூட நிர்வாகங்கள் மத்திய வங்கிக்கு அனுப்புவதில்லை. சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்றவற்றை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கங்கள் தொடர்ந்தும் தொழிற்காரியாலயங்களின் மூலம் நீதிமன்றங்களையே நாடவேண்டியுள்ளது.
இதன் காரணமாகத் தொழிலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகளை காலக்கிரமத்தில் பெற்றுக் கொள்வதில் வீண் தாமததிற்கும் அசௌகரியங் களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடாது. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்து பாதுகா ப்பதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் உரிய முறையில் பெற்றுக் கொடுப்பதற் கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தோட்டங்களை அரச நிறுவனங்களால் முறையாக நடத்த முடியாதென்றால், இவற்றை முறையாக நடத்தக்கூடிய சிறந்த தனியார் கம்பனிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகங்களை அவர்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது உசிதமானதாகும்.
ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகள் தொழிலாளர்களுக்கு நன்மையும் இல்லை

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கு மிடையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு அழுத்தங்களும் போராட்டங்களும் இடம்பெற்ற போதும் முடிவில் அவை புஸ்வானமாகிவிட்டன. ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக தொழிற்சங்கங்கள் அறிக்கைகளை விடுவதால் தொழிலாளர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காதது வருத்தத்துக்குரியது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் பி.பி.கந்தையா தோட்ட கமிட்டி தலைவர்கள் மத்தியில் பேசும் போது குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கிய அமரர் எஸ்.நடேசன் சங்கத்தின் தலைவராக விளங்கிய காலத்திலேயே கூட்டு ஒப்பந்தம் தொடர்பான வேலைகள் ஆரம்பமாகின. இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் நன்மையையும் தீமையையும் கொண்டது.எனினும், அடிமைச்சாசனம்,தீங்கிழைக்கும் மரணசாசனம் என்றெல்லாம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மாற்றீடான சரியான முடிவினை அவை முன்வைக்காதது விசனத்துக்குரியது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகள் கூட்டு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளன. மேலும் வாழ்க்கைச் செலவுப்புள்ளி உயர்வுக் கொடுப்பனவு தோட்டத்தொழிலாளருக்கு வழங்குவது அவசியம் என்பதைக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்களுடன் தொடருகின்றன.இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களினது விலையும் அதிகரித்துள்ளன. தற்போது கிடைக்கும் ஊதியம் எந்த வகையிலும் போதுமானதல்ல.எனவேதான் வாழ்க்கைச் செலவுப் புள்ளியோடு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பதை எமது சங்கம் வலியுறுத்துகின்றது என்றார்.

Monday, May 25, 2009

நுவரெலிய மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுஅச்சத்தில் பல குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தின் வௌ;வேறு பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்குள் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், புசல்லாவ, டெல்டாபுர, கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடமொன்று மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் இக்கட்டடத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம், நுவரெலியா, யுனிக்விவ் கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியொன்றின் சமையலறைப் பகுதி நேற்று திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. இருப்பினும் உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை. கொத்மலையின் சில பிரதேசங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா - கண்டி வீதியிலுள்ள டொப்பஸ் என்ற இடத்திலுள்ள தேயிலைத் தோட்டமொன்று நேற்று சுமார் முப்பது மீட்டர் தூரத்திற்குத் திடீரென மண்சரிவுக்கு உள்ளானது. எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மலையகப் பிரதேசங்களில் தொடராக மழை பெய்து வருவதால் தான் இவ்வாறு அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுகின்றன. அதனால் மலையகப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மழைக் காலங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார்.
அரசினால் பொறுப்பேற்கப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்கள் மாற்றம்

பதுளை மாவட்டத்தில் அரசு பொறுப்பேற்றுள்ள 12 பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரங்களும் தொழிலாளர் நன்மை கருதி அவர்களுக்கேற்ப மாற்றப்படுவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ், பதுளை மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வைத்தியசாலைகளுக்கு மருந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார். அரசு பொறுப்பேற்ற வைத்தியசாலைகள் நவீன மயப்படுத்துப்படுவதுடன் மேலும் ஐந்து பெருந் தோட்ட வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்
பேச்சுவார்த்தையின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் - சென்னன்

கூட்டு ஒப்பந்தந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவர் ரி.வி. சென்னன் பதுளை காரியாலயத்தில் தமது தொழிற்சங்க முக்கியஸ்தர்களுடன் பேசும் போது தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கென செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர் சமூகத்திற்கு நன்மைகள் கிடைப்பனவாக அமைய வேண்டும். இந்த ஒப்பந்தமானது தொழிலாளர்களை பாதித்துள்ள போதிலும் ஒப்பந்தத் துடன் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருக்கின்றன. இவை இரகசியமாகவே நடை பெற்றுள்ளன. பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்கள் பூரணமாகவே மறைக்கப்பட்டுள்ளன. இச் செயற் பாடுகள் எமக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியி ருக்கின்றது. பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட விடயங்கள் எடுக்கப்பட்ட முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றார். தொழிலாளர்களின் சம்பளத்தில் பகுதி பகுதியாக உயர்வினை ஏற்படுத்தாமல் 300 ரூபா என்ற அடிப்படையிலாயினும் அடிப்படைச் சம்பள உயர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். அச்சம்பளத்துடன் வாழ்க்கைச் செலவுப்புள்ளிக்கமைய பகுதி பகுதியாக சம்பள உயர்வு இடம்பெறல் வேண்டும்.
ஊவா மாகாணசபை 28 இல் கலைக்கப்படலாம்?

ஊவா மாகாணசபை எதிர்வரும் 28ஆம் திகதி கலைக்கப்படலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சபையின் ஆயுட்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும் அதற்கு முன்பு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கமையவே எதிர்வரும் 28 ஆம் திகதி இச்சபை கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இம் மாகாணசபையுடன் தென் மாகாணசபையும் கலைக்கப்படவுள்ளது.
மஸ்கெலியா சாமிமலை வீதியில் மண்சரிவு அபாயம்

மஸ்கெலியா நகரில் சாமிமலை வீதியில் மேற்குப் புறமாக வீட்டு மனைகள் அமைப்பதற்காக பாரிய மண் திட்டுகள் டோசர்கள் மூலம் வெட்டப்பட்டதால் அப்பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் சிலவற்றில் பாரியளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அம்பேகமுவ பிரதேச சபை முதல்வர் இவற்றை நேரில் பார்வையிட்டதையடுத்து அங்குள்ள மக்களை வேறு இடங்களில் தங்குமாறு பணித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
டிஸ் ரி.வி. அன்ரனாக்களை அகற்ற உத்தரவு

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தோட்டப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள டிஸ் ரி.வி.அன்ரனாக்களை உடனடியாக அகற்றுமாறு பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இவற்றை அகற்றி வருவதாக தோட்டப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சாமிமலை, கவரவில, நோர்வூட், பொகவந்தலாவை, டிக்கோயா, புளியாவத்தை போன்ற பகுதியிலுள்ள தோட்டங்களுக்கு வருகின்ற பாதுகாப்புத் தரப்பினர் உடனடியாக இவற்றை அகற்றுமாறு அறிவித்துள்ளனர். தமது பொழுது போக்குக்காகப் பெறப்பட்ட இந்த அன்ரனா மூலமாக தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்ததாகவும் தற்போது இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மலையக அரசியல் தலைமைகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெறுமதியான மரங்களை வெட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரிக்கை

அக்கரபத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனியின் அப்புத்தளை கிளனனோர் தோட்டத்தில் பெறுமதிமிக்க தேப்பந்தைன் மற்றும் சவுக்கு மரங்கள் வெட்டப்படுவதை உடன் நிறுத்துமாறு தோட்டத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இத் தோட்டங்களில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தேப்பந்தைன் மரங்கள் இந்த வருட ஆரம்பத்திலிருந்து வெட்டப்பட்ட விபரத்தை நிருவாகமே கூறியதாக தோட்ட கமிட்டித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பணம் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் அபிவிருத்திக்கும் தோட்ட மக்களின் நலம் சார்ந்த பொது வேலைத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்ட போதும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லையென முறையிடும் தொழிற் சங்கங்கள் சவுக்கு மரங்கள் வெட்டப்படுவதனால் அதனைச் சூழவுள்ள பெறுமதியான தேயிலைச் செடிகள் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் தோட்ட கம்பனிக்கும் பொலிஸ் அதிகாரி,மாவட்ட செயலகத்துக்கும் முறைப்பாடு செய்துள்ளனர். அதில் மரம் வெட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளதுடன் கூட்டு ஒப்பந்தப்படி மரம் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.