Thursday, September 11, 2008

வீடில்லாப் பிரச்சினைக்குதீர்வு காணும் திட்டம்

மக்கனின் வீடில்லாப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் பாரியதொரு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதிலும் 2009ம் ஆண்டில் 21,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வீடில்லாப் பிரச்சினையினால் நீண்ட காலமாக அல்லலுறுகின்ற பல்லாயிரம் குடும்பங்கனின் துயரைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் இத்திட்டம் பெரிதும் உதவுமென எதிர்பார்க்கலாம்.

நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ள 21,000; வீடுகளில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகனில் 3,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2009ம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின்போது மேற்படி வீடமைப்புக்கென நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வீடமைப்பானது மலையக மக்களைப் பொறுத்தவரை பெரும் வரப்பிரசாதமென்றே கூற வேண்டும். பரம்பரை பரம்பரையாக ‘லயன்கள்’ என அழைக்கப்படும் வரிசை வீடுகனில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மக்கள் பலர் இவ்வீடமைப்புத் திட்டத்தினால் பெரும் நன்மையடையப் போகின்றனரென்பது உண்மை. வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மானிகையில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments: