Thursday, November 19, 2009

மத்திய மாகாண பாடசாலைகள் 23 ஆம் திகதி முதல் மூடப்படும்

மத்திய மாகாணத்தில் ஏ (எச் 1 என் 1) இன்புளுவென்சா காய்ச்சலுக்கான அச்சுறுத்தல் நிலவுவதையடுத்து இம் மாதம் எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடி விட அரசு தீர்மானித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுடன் 19-11-2009 அன்று நடத்திய விசேட கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

No comments: