Thursday, November 26, 2009

தென் மாகாண தோட்டப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை – ஆளுநர்

13வது அரசியல் யாப்பிற்கு இணங்க கிடைக்கப்பெற்ற அதிகாரங்களின்படி பாதுகாப்பு அதிகாரங்களைக் கொண்டவர்களுடன் இணைந்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டுமென தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய மகாணசபையின் கூட்டத்தில் கொள்கை விளக்கவுரை ஆற்றும் போது தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது நோயார்களுக்கான சிகிச்சை சேவைகளின் கீழ் இரசாயண வசதி கூடங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளை இனங்கண்டு மேம்படுத்தவும், சுற்று சூழல்களை பவித்திரமாக வைத்துக் கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வைத்தியர்களுக்காகவும், தாதியர்களுக்காகவும் ஆஸ்பத்திரி அருகே விடுதிகள் நிறுவுதல், விசர் நாய்கடி நோய் ஒழித்தல், டெங்கு, மலேரியா ஒழித்தல், தேசிய வேலைத்திட்டங்களின் கீழு; நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விசேடமாக தோட்ட மக்களின் சுகாதார திட்டங்களை மேம்படுத்த சுகாதார வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

தென் மாகாணத்தில் காலி, மாத்தறை மாவட்டங்களில் வாழ்கின்ற தோட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆவண செய்தல்,

தோட்ட மக்களுக்கு சகாதார வசதிகளை அளித்தல் தோட்டங்களை சார்ந்த பகுதிகளுக்கு பாதைகளை அமைத்தல் போன்ற திட்டங்கள் தோட்டக்கட்டமைப்பு விடயங்களில் பங்களிப்பு செய்யப்பகிறது. அதேபோல்இதுவரை இனங்காணாத தோட்டக் குறைபாடுகளை 2010ம் ஆண்டில் அவைகளை பூரணத்துவப்படுத்தி அம் மக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்தல்.

No comments: