Wednesday, October 14, 2009

மீண்டும் சம்பள உயர்வு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தை தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் மீண்டும் முன்னெடுப்பதற்கு மலையக தொழிற்சங்கங்கள் தயாராவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தேசிய தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பிக்கவுள்ளதாக இ.தொ.ஐ.மு தொழிற்சங்க தலைவர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் கடந்த செப்டம்பர் மாதம் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்படட கூட்டு ஒப்பந்தத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகிறது என்றார். ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழிய நம்பிக்கை நிதி ஆகியவற்றை வழங்குமாறு தொழில்கொள்வோருக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட 405 ரூபா சம்பளமே வழங்கப்படுவதில்லை எனத்; தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இந்த விடயங்கள் குறித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணியும் இந்தப் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்

No comments: