Saturday, September 12, 2009

வருடா வருடம் சம்பள மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அரவிந்தகுமார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வருடா வருடம் மீளாய்வு செய்யப்பட வேண்டுஅமன ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளருமான அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் இலங்கை உட்பட சர்வதேச மட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணி புரிவோருக்கு வருடா வருடம் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றன. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் சக்தியாக விளங்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. அதிலும் பல்வேறு இழுபறிகளும், புறக்கணிப்புக்களும் இடம் பெறுகின்றன. போராடியும் நியாயம் கிடைப்பதில்லை. நாளாந்தம் உயர்வடையும் பொருட்களின் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாது தோட்டத் தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய செலவினங்களை பார்க்கையில் 500 ரூபா என்பது பாரிய பிரச்சினையல்ல.
ஆகையினால் வருடா வருடம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மீளாய்வு செய்யப்பட்டு குறைந்த பட்சம் 50 வீதமான சம்பள உயர்வையேனும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்தோடு இப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.

No comments: