Wednesday, September 2, 2009

கொழும்பில் தொழிற்சங்கங்களின் ஒன்றுகூடல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள ஒத்துழையாமைப் போராட்டம் குறித்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத மலையக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணி, அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பனவற்றின் முக்கிய பிரதிநிதிகளே ஆராயவுள்ளதாக சதாசிவம் தெரிவித்தார்

No comments: