Friday, July 10, 2009

நான்கு மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்த தொழிலாளர்கள்

ஹொரணை,மொரகஹஹேன யாலகல தனியார் தோட்டத்தைச் சேர்ந்த ஐம்பது தொழிலாளர்களுக்கு,தோட்ட உரிமையாளர் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ம.ம.மு யின் இங்கிரிய மாவட்டப் பிரதிநிதி எம்.எஸ்.பெருமாள் தோட்ட உரிமையாளருடன் தொடர்பு கொண்டபோது தோட்ட உரிமையாளர் இதற்கான காரணத்தைக் கூறாது இழுத்தடித்து வருவதாகவும், இதனையடுத்து தொழிலுறவு அதிகாரி மற்றும் பாணந்துறை தொழில் காரியாலயத்திலும் முறைப்பாடு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
இதேவேளை, சம்பளம் வழங்கப்படாததால் இங்குள்ள தொழிலாளர்கள் ஊதியமில்லாது பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளதுடன் தொடர்ந்தும் வேலைக்குச் சென்று வருகின்றனர். தனியார் தோட்ட உரிமையாளர்கள் பலர் இன்று தோட்டங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்குரிய சம்பளம், ஊழியர் சேம இலாப நிதியம், உரிமைகள், சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் போன்றவற்றை வழங்குவதில் பின்னின்று வருவதுடன், தொழிலாளர்களை அசௌகரியத்திற்குட்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: