Wednesday, July 8, 2009

தொழிலாளர்களுக்கு 600 ரூபா கிடைக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு நியாயமான சம்பளமாக 600 ரூபாய் கிடைக்க வேண்டுமென்பதே கோரிக்கையாகும் பிரதியமைச்சர் பி.இராதாகிருஷ்ணன் பெல்மதுளை, உனுவல தோட்டத்தில் அமைச்சர் பி.சந்திரசேகரனின் 2,82,000 ரூபா நிதியில் கட்டப்பட்ட நீர்;ப்பம்பியுடன் கூடிய குடிநீர்;த்திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தாம் கூட்டு ஒப்பந்தத்தில் பங்காளிகள் அல்ல. என்று குறிப்பிட்ட அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதில் தாம் ஆணித்தரமாக இருப்பதாக குறிப்பிட்டார். தாம் ஒரு மனிதனுக்குரிய அடிப்படை தேவைகளான சுகாதாரம், வீடு, குடிநீர் மின்சார வசதி போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதில் முன்முரமாக செயற்படுவதாக தெரிவித்தார். இதனை எனவே நாம் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார்

No comments: