Monday, June 22, 2009

தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்

கடந்த 11 வருடங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணம், தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென மத்திய மாகாண சபையில் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தில் சம்பள உயர்வு தொடர்பான பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வலியுறுத்தியுள்ளார். 1998 இல் இருந்து கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பளப் பிரச்சினையைத் தீர்த்து வருகிறோம். எமது மாகாணத்திலேயே தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். எனவே வருமானம் பற்றி கேட்க எமக்கு அதிகாரம் உண்டு. தொழிலாளருக்கு சம்பளம் போதாது. ஒரு நாள் சம்பளத்தினை 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.

No comments: