Monday, May 4, 2009

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியும் -ஆறுமுகன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது ஆறுமுகன் தொண்டமான் பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த முறை சம்பள உயர்வின் போது உங்கள் ஒற்றுமையையும் கட்டுப்பாட்டினையும் இழந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித் தனி போராட்டங்களை மேற்கொண்டீர்கள் இதனால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பாரிய நட்டம் ஏற்பட்டது. மெதுவாக வேலை செய்யும் போராட்டம் காரணமாக, தனி நபர் ஒவ்வொருவரும் தலா 3000 ரூபா வரை மாதாந்தம் இழந்தார்கள். இம் முறை அவ்வாறான போராட்டங்கள் எதனையும் செய்ய வேண்டாம்.
ஒவ்வொருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்கப்படும். இது சம்பந்தமாக பல பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் 13 ஆம் திகதியும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். அதேபோல் சம்பளமும் நியாயமான முறையில் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்

No comments: