Thursday, May 14, 2009

பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைத்தால் மக்களுக்கு நன்மை

தோட்டப்பகுதிகளில் மூடப்பட்டிருக்கும் கூட்டுறவுச் சங்கக்கடைகள் அனைத்தையும் திறப்பதன் மூலம் 14,000; மக்கள் நன்மையடைவார்கள் என பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் பசறை ப.நோ.கூ. சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தெரிவித்துள்ளார்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பல கூட்டுறவுச்சங்கக் கடைகள் தோட்டப்பகுதிகளில் வெறுமனே மூடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் 1952 ஆம் ஆண்டு பசளை குருப் தோட்ட கூட்டுறவுச்சங்கக் கடையே முதலாவதாக கூட்டுறவு அதிகார சபையிலும் கூட்டுறவு அமைச்சிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன்பின்னர் நகரம் மற்றும் கிராமப் புறங்களிலும் கடைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகின்றது. 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பசறை குருப் தோட்ட கூ. கடையும், அதேபோல் இன்னும் 50 க்கும் மேற்பட்ட கடைகள் தோட்டப்பகுதிகளில் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு மூடப்பட்டுள்ள கடைகளின் அனைத்து விபரங்களையும் திரட்டி அதன் பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

No comments: