Thursday, April 16, 2009

மொனராகலை பகுதி தமிழ் தொழிலாளர்கள் மீது காடையர்கள் அட்டகாசம்

மொனராகல மாவட்டம் புத்தள, இக்கம்பிட்டிய பகுதிகளில் அப்பாவி சிங்கள மக்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்ற பெரும்பான்மையின காடையர்கள் தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக காடுகளுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வெள்ளச்சிட தோட்டம், போகாலயின் றப்பர் தோட்ட மக்களே. கிராமங்களிலிருந்து இளைஞர்கள் பலர் ஆயுதங்களுடன் சென்று தாக்கியுள்ளதாகவும், தோட்டங்களுக்குள் புகுந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதனால் 11 தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மொனராகலை அரசினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: