Saturday, October 18, 2008

தொழிலாளர்களுக்குரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

ஜனவசம, பெருந்தோட்டத்துறை போன்ற அரச தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய கொடுப்பனவுகள் கிட்டாமை குறித்து நீதிமன்றம் சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், சமூக துறை, இளைஞர் வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சம்பள பிரச்சினை மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக அமைய வேண்டும்

தொழில் அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன அறிவித்துள்ள, தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, நிபந்தனைகளுக்கு உட்படாத, இம்மக்களின் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்கின்ற வகையில் அமையவேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க உள்ளதாக தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியான விடயம். இம் முயற்சி கூட்டு ஒப்பந்தத்தின் சிக்கலான சரத்துக்களைப் போல நிபந்தனைகளுடன் அமைந்துவிடாமல் இருப்பதனை தொழில் அமைச்சர் உறுதி செய்தால் அப்பாவி தொழிலாளர்கள் முழுதாக பயனடைவார்கள். கூட்டு ஒப்பந்தம் என்ற மரணப்பொறி எமது எல்லா முயற்சிகளையுமே பயனற்றதாக்கிவிட்டது. தமது தினக்கூலியையும் இழந்த தொழிலாளர்கள் என்ன தான் ஒற்றுமையாக போராடினாலும் கூட இந்த கூட்டு ஒப்பந்தம் என்ற அகழியை தாண்ட அவர்களால் முடியாமலேயே போய் விடுகிறது. எனவே இம்முறையாவது தொழில் அமைச்சரின் நேரடித் தலையீட்டால் வாழ்க்கை செலவு புள்ளியோடு அமைந்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, October 17, 2008

தமிழ் சாகித்திய விழாவில் கௌரவிக்கப்படுவோர்

மத்திய மாகாண தமிழ்க் கல்வி இந்து கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் 18, 19 ஆம் திகதிகளில் நுவரெலியாவில் இடம்பெறவுள்ள மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் பின்வருவோர் கௌரவிக்கப்படவுள்ளோர்

ஆன்மீகத்துறை ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஐயர், சிவசங்கர குருக்கள், கனகசபை இராஜபுவனேஸ்வரன், ரகுநாதன் ராஜேந்திரன்.
கல்வித்துறை முத்து கருப்பன் சோமசுந்தரம், செல்லையா ஜெயக்குமார், திருமதி சீவரட்ணம்.
சமூக சேவைத்துறை சிதம்பரம் பெருமாள் ரெட்டியார், எம்.எம்.சத்தியானந்தன், பழனியாண்டி மோகன் சுப்பிரமணியம், அ. .பாஸ்கரன்.
கலைத்துறை சந்தனம் பிரான்ஸிஸ் வசந்தன், எஸ்.செல்லத்துரை, எஸ்.ஆறுமுகராஜா, பிரதிஷ்குமார், எம்.எஸ்.ஸ்ரீதயாளன்.
ஊடகத்துறை அருணாசலம்பிள்ளை பொன்னம்பலம், சிவலிங்கம் சிவகுமார், சுப்பிரமணியம் ஜெப்ரி. ஜெயதர்ஷன், பெரியசாமி இராஜேந்திரன், இரா செல்வராஜா, தேவராஜன் வசந்தகுமார்.
விளையாட்டுத்துறை கருப்பையா திருநாவுக்கரசு, கே.ரெங்கநாதன்.
தொழிற்சங்கத்துறை நல்லன் இராமசாமி, இராமகிருஷ்ணன்.
அரச நிர்வாகத்துறை ச.ஜேசுதாசன்
இவர்களுடன் நுவரெலியா கோட்லோஜ் தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் வீ. பாலேந்திரா, கந்தப்பளை மெதடிஸ் கல்லூரி அதிபர் மகேஸ்வரன்,
கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வரை நடந்து சாதனை படைத்த தயாளன் (பொகவந்தலாவை சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவன், பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்ப் பிரிவு)
மத்திய மாகாண விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவி அல்பியன் தமிழ் வித்தியாலய மாணவி லக்னபிரியா (அக்கரப்பத்தனை அல்பியன் தோட்டம்)