Tuesday, September 30, 2008

தேயிலை விலை உயர்வுக்கேற்ப சம்பள உயர்வு

தேயிலை விலை உயர்வுக்கேற்ற முறையில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தவும் தோழர் கொல்வின் ஆர்.டி.சில்வா சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதாவது 100 ஏக்கருக்கு குறையாத தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் நாட்களுக்கு கீழ் கண்ட முறையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

01. உலக சந்தையில் ஒரு இறாத்தல் தேயிலை ரூ.2.50 சதத்திற்கும், ரூ 2.75 சதத்திற்கும் விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு 10 சதம் சம்பள உயர்வு

02. அதே அடிப்படையில் ரூ.2.75 சதத்திற்கும் ரூ.2.99 சதத்திற்குமிடையில் விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு 20 சதம் உயர்வு.03. ரூ. 3.00 க்கு மேல் தேயிலை விற்கப்பட்டிருந்தால் நாளொன்றுக்கு 30 சதம் உயர்வு.

இந்த அடிப்படையில் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தினார். மேற்கூறப்பட்ட சம்பள உயர்வை விட தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தவும் தோழர் கொல்வின் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதற்கமைய 1972 ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்று அமுலில் இருந்த அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி ஆண் தொழிலாளருக்கு நாளொன்றுக்கு 18 சதமும் பெண் தொழிலாளர்களுக்கு 12 சதமும் வழங்கப்பட்டது. ஆண், பெண், தொழிலாளர்களின் சம்பளத்தைச் சம சம்பளமாகக் கொண்டுவர ஆலோசி;த்து வந்த தோழர் கொல்வின் தனது அமைச்சின் மூலம் 1973 ம் ஆண்டு நவம்பர் மாதம், 1974 ஏப்ரல், 1975 மார்ச் மாதங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தைக் கீழ் காணும் அடிப்படையில் உயர்த்தினார்.

1970,மே, 1973, 1974, 1975 விகிதாசாரம் மே, நவம்பர், ஏப்ரல், மார்ச், முறையேஆண்- 3.07, 4.17, 4.70, 5.43, 76 வீதம், பெண்:- 2.45, 3.15, 3.53, 4.07, 67 வீதம், பிள்ளை:- 2.13, 2.81, 3.17, 3.65, 71 வீதம்,

ரப்பர் தோட்டத் தொழிலாளி

1970, 1973, 1974, 1975 விகிதாசாரம் மே, நவம்பர், ஏப்ரல், மார்ச், முறையே ஆண்:- 3.12, 4.22, 4.75, 5.50, 76 வீதம், பெண்:- 2.60, 3.32, 3.72, 4.26, 64 வீதம், பிள்ளை:- 2.28, 2.97, 3.34, 3.85, 69 வீதம்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி 1970 முதல் 1975 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 70 சத வீதமாக உயர்ந்துள்ளது என்பதனை நாம் உணர வேண்டும். இந்தக் காலப் பகுதியிலேயே தோட்டத் தொழிற் துறை தொழிலாளர்கள் கூடுதலான சம்பள உயர்வைப் பெற்றனர்.

தோட்டத் தொழிலாளர்களும் லங்கா சமசமாஜக் கட்சியும் - எஸ். இராமநாதன்

No comments: