Thursday, August 11, 2016

தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ள 2,500 ரூபா

அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்பட்ட 2500 ரூபா  தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குனருமான எம்.வேங்குருசாமி இ.தொ.கா தலைமை காரியமான சௌமியபவனில் இடம்பெற்ற தோட்டத் தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் மலையக சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்ற மலையக தொழிற்சங்கங்களோ, அல்லது இதர சமூக அமைப்புக்களோ எதுவாக இருந்தாலும் மலையக சமூகத்திற்காக பொறுப்பு கூறும் கடையிலிருந்து தவறு விடுவார்களேயானால் வரலாற்றில் மேலும் தவறிழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள். 

மலையக சமூகம் நேற்று இன்றல்ல இரண்டு நூற்றாண்டுகளை கொண்ட சமூகமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. 2,500 ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என மார்தட்டிக் கொள்பவர்களின் அறிக்கை போர்களும் செய்தியாளர்களின் மாநாடுமே திருப்தியை கண்டதே தவிர வேறொன்றுமில்லை. 

15,16 நாட்கள் வேலை செய்தாலே போதும் 2,500 ரூபா தொழிலாளர்களுக்கு கிடைத்துவிடும் என்று வாய் கூசாமல் கூறி வருபவர்கள் வேலை செய்த நாட்களுக்கு மாத்திரமே நாளொன்றுக்கு 100 ரூபா வழங்கப்படுகிறது. அதுவும் அரசாங்கத் தோட்டங்களில் இத்தொகை வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற இக் கொடுப்பனவானது பெருந்தோட்ட மக்களை மேலும் ஏமாற்றி அவர்களை கடனாளிகளாக கையேந்தும் நிலைமையை உருவாக்கியுள்ளது. 

இ.தொ.கா தனது இலட்சியத்திலிருந்து விலகிச்செல்லாது தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரமாக விளங்கிய அமரர் எஸ்.தொண்டமானின் கொள்கைப்படி தொழிலாளர்களை நட்டத்தில் வீழ்த்தாமல்  அவர்களது வருமானத்துக்கு தடையில்லாதவாறு சாத்வீக போராட்டங்கள் மூலமாக பிரச்சினைகளை வென்றெடுக்கும். 1984ம் ஆண்டு தொட்டமானின் அணுகுமுறைப்படி பிரார்த்தனை இயக்கம் முழு மலையக தோட்டங்கள் அனைத்திலும் தோன்றியது. மூன்று நாட்களுக்குப் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை விடயத்தில்  அமரர் தொண்டமான் வெற்றி கண்டார். 

கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும். பிரச்சினை என்றிருந்தால் அதற்கான தீர்வு கட்டாயம் உண்டு. 2,500 ரூபா விடயத்தில் அவர்கள் கூறியபடி தொடர்ந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

தொழிலாளர் பிரச்சினையில் ஒருமித்த கொள்கையே அவசியம்

மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களுக்கிடையில் மாறுபட்ட கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின உரிமைகளை பெற போராடும்போது ஒருமித்த கொள்கையுடன் செயற்பட வேண்டுமென அஸீஸ் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டத் தொழிலார்களது சம்பள உயர்வு விவகாரத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும். ஆனால் கடந்த 2015 மார்ச் மாதம் 31ம் திகதியுடன் அது நிறைவடைந்து அடுத்த இரண்டாண்டுக்கான புதிய ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. 

இதற்கான காரணம் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாமையே. தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் கொள்கைகளை பற்றி சிந்திக்காமல் தோட்டத் தொழிலார்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் ஒருமித் கொள்கையுடன் செயற்பட்டால் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் கம்பனிகள், தொழிலாளர்களை ஏமாற்றாத வகையில் கூட்டு ஒப்பந்தம் அமைய வேண்டும்.. அத்தோடு இந்த ஒப்பந்தத்தில் காணப்படும் தொழிலாளர் நலன் சார்ந்த ஏனைய விடயங்களும் தற்போதைய கால சூழலுக்கேற்ப அமைய வேண்டும். 

இடைக்கால கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் எல்லா தொழிலாளர்களுக்கும் இது கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அரச பெருந்தோட்ட நிர்வாகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. 
இந்த விடயத்திலும் கூட்டுத் தொழிற்சங்கங்கள் உரிய கவனம செலுத்த வேண்டும். மலையகச் சமூகத்தின் பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கிணங்க சமூகத்தின் ஒற்றுமையிலே இது தங்கியுள்ளது என்றார். 

Wednesday, August 10, 2016

2500 ரூ கொடுப்பனவு- தொழிலாளர்கள் தெளிவற்ற நிலை

தோட்டத் தொழிலாளர்களுக்டகு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு கம்பனி நிர்வாகங்களால் 26-07-2016 தொடக்கம் வழங்கப்பட்டு வரும் 2500 ரூபா கொடுப்பனவு தொடர்பாக தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் தெளிவற்ற நிலையில் உள்ளதாக விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் முதலாளிமார் சம்மேளனம் இக்கொடுப்பனவை இரண்டு மாதத்திற்கு மாத்திரம் வழங்குவதாக ஒப்புக்கொண்டு ஜூன், ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்க ஊழியர்களுக்கு 10,000 ரூபா, தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென அறிவித்திருந்தது. 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு அரசாங்கத்துறையில் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது.  

எனினும் தனியார் துறையில் மாதம் 10,000 ரூபாவிற்குள் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் வரையறை செய்துள்ளது. தனியார்துறையில் சேலை செய்பவர்கள் இன்று 10 ஆயிரம் ரூபாவிற்கு அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பதை அரசாங்கம் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இக்கொடுப்பனவு வாழ்க்கைச்செலவு என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் கொடுப்பனவு வழங்கப்படுவது அவசியமாகும். 

தோட்டக்கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் சம்பள அதிகரிப்பைக் கோரும்போது இதன் காரணமாக பாரிய சிக்கல்கள் தோன்றலாம். கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளது. 
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 2,500 ரூபா வங்கிகளிலிருந்து கடனாக பெற்று வழங்கப்படுகின்றது. இதற்கான வட்டியை தொழிலாளர்களின் சம்பளத்தில் அறவிடவுள்ளனர். இந்த நடைமுறை தொழிலாளர்களின் இடைக்கால கொடுப்பனவில் மட்டுமே உள்ளது. 
கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில் தோட்டங்கள் உப குத்தகைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இது இவ்வொப்பந்தத்துக்கு எதிரான செயற்பாடாகும். நிலவிவரும் வரட்சியினுடனான காலநிலையினால் அதிகமான தோட்டங்களில் பறிக்கப்படும் பச்சைக்கொழுந்து கிலோ 25 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. ஆனாதல் தனியார் துறையினரின் பச்சைச்கொழுந்து கிலோ 65 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.  இது தொடர்பாகவும் அரசாங்கம் அறிந்திருக்கின்றது. 

தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணியில் வீட்டுரிமை பெற்றுக்கொடுப்பதிலும் இழுபறி நிலையே இருந்து வருகிறது 07 பேர்ச் காணியில் வீட்டுரை கொண்டவர்களுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது அவசியமாகும். இவ்விடயங்களில் தொழிற்சங்கங்கள் பேதங்களை மறந்து செயற்பட்டால் மாத்திரமே தொழிலாளர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்றாhர் கிருஷ்ணசாமி.

Tuesday, August 9, 2016

தேசிய தொழிலாளர்களுடன் கைகோர்த்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மட்டுமே மலையக அரசியல்வாதிகள்,; தொழிற்சங்கவாதிகள் பேசி வருகின்றனரே தவிர மலையக மக்களின் ஏனைய இன்னோரன்ன பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன என்று ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமகால முன்னெடுப்புக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கி சகல துறைகளிலும் தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இதிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகிச்செல்ல முடியாது. ஊலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தொழிலாளர்களின் உன்னதமான போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாத நிலையில் அவர்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டள்ளார்கள். நாளுக்குநாள் தொழிலாளர்கள் மீதான சுமைகள் அதிகரித்து வருகின்றன. எனினும் இது தொடர்பாக யாரும் உரிய கவனம் செலுத்துவதாக இல்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்றார் சந்திரசேகரன். 

இலங்கையைப் பொறுத்தளவில் விசேடமாக நாம் மலையகத் தொழிலாளர்களை குறிப்பிட வேண்டும். இவர்களுக்கு அநீதி அதிகரித்து காணப்படுகின்றது. மலையக அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இவர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்றனரா என்பது கேள்விக்குரியாகும். தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை மட்டுமே முதன்மைப்படுத்தி கோசங்களை எழுப்பி வருகின்றனர். மலையக மக்களின் இன்னோரன்ன பிரச்சினைகளான வீடு, காணி, மக்களின் சமூக வாழ்க்கை, கல்வி, தொழில், சுகாதாரம் என ஏனைய பிரச்சினைகள் பற்றி குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. எனினும் இதனையும் உருப்படியாக செய்ததாக தெரியவில்லை. நல்லாட்சி இடம்பெறுவதாக தெரிவிக்கின்றார்கள் இன்று நல்லாட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் என பலரும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுத் தருவதாக கூறினார்கள். இவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் இப்போது காற்றில் பறந்து விட்ட நிலையில் தொழிலாளர்களை கைவிட்டள்ளார்கள். 

தேசிய ரீதியில் தொழிலாளர்கள் இருந்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை மலையக அரசியல்வாதிகள் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு பிரிந்து வைத்திருப்பதால் பாதக விளைவுகளே ஏற்படுகின்றன. பாழாய் போன தொழிற்சங்கங்களையும் மலையக அரசியல்வாதிகளையும் மலையகத் தொழிலாளர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கும் அப்பால் வர்க்க ரீதியாக நாம் பார்க்கின்றபோது தொழிலாளர் சக்தி என்ற ஒன்று இருக்கிறது. மலையக தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்று சேர்கின்றபோது தொழிலார் சக்தி பலமடைகின்றது. காத்திரமான வெற்றிகளை பெறக்கூடிய வாய்பர்பு அதிகமாகவே காணப்படுகின்றது.

தோட்ட மக்களுக்கு இப்போது சமூக ரீதியான பிரச்சினை ஒன்றும் உள்ளது மலையக பெருந்தோட்டங்களில் வாழ்வதா இல்லையா என்ற சிந்தனையுடன் இவர்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டில் உள்ள ஏனைய தொழிலாளர்களுடன் கைகோர்த்து போராட்டத்தின் ஊடாக தமது பிரச்சினைக்கான பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மலையக அரசியல்வாதிகளும், தொழிற்சங்கங்களும் தோல்வி கண்டிருக்கின்றன. எனவே தொழிலாளர்கள் தேசிய போராட்டத்தினை முன்னெடுப்பதே சிறந்ததாகும். 

68 வருட காலமாக முதலாளித்துவ ஆட்சியாளர்களும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தவறியுள்ளனர். எனவே பொதுவாக நாட்டு மக்களுக்கு புதிய பாதை என்ற ஒன்று தேவைப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் மகிமையை தோட்டத் தொழிலாளர்களை பிரநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மழுங்கடிப்பு செய்கின்றன. இந்த நிலையில் இருந்து தொழிலா ளர்கள் மீண்டெழுதல் வேண்டும். அதற்கான காலம் இப்போது உதயமாகி இருக்கின்றது என்றார்.

Sunday, August 7, 2016

மலையக சமூகத்தின் எழுச்சிக்காக அரசாங்கம் தோள் கொடுக்க வேண்டும்

மலை­யக மக்­களின் பல்­வேறு விடங்கள் தொடர்­பா­கவும் காலத்­துக்­குக்­காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் அபி­வி­ருத்­திக்கு வழி­காட்­டுதல் வேண்டும் என்று திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஷ் தெரி­வித்தார். மலை­யக மக்­களின் சம­கால போக்­குகள் தொடர்பில் கருத்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது குறித்து சந்­தி­ரபோஷ் மேலும் கருத்து தெரி­விக்­கையில் மலை­யக சமூகம் என்­பது இந்­நாட்டில் முக்­கி­யத்­துவம் மிக்க தனித்­துவம் வாய்ந்த ஒரு சமூ­க­மாகும். இச்­ச­மூ­கத்தின் கலா­சார விழு­மி­யங்கள் பெறு­மதி மிக்­க­ன­வாக விளங்­கு­கின்­றன.
ஏனைய இனங்­க­ளி­லி­ருந்தும் வேறு­பட்ட விசே­டித்த போக்­குகள் இம்­மக்­க­ளி­டையே காணப்­ப­டு­கின்­றன. இம்­மக்­களின் மகத்­துவம் சரி­யாக உண­ரப்­ப­டுதல் வேண்டும். நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தோள் கொடுக்கும் மலை­யக சமூ­கத்­தி­னரின் எழுச்­சிக்­காக அர­சாங்கம் தோள் கொடுக்க வேண்­டி­யதும் மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது.
மலை­யக மக்கள் பல்­வேறு புதிய பரி­மா­ணங்­க­ளையும் கொண்டு விளங்­கு­கின்­றனர். இப்­ப­ரி­மா­ணங்கள் தொடர்பில் ஆங்­காங்கே கலந்­து­ரை­யா­டல்கள், கருத்துப் பரி­மா­றல்கள் என்­பன இடம்­பெற்று வரு­கின்­றன. பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் ஆர்­வ­லர்கள் எனப் பலரும் இது தொடர்­பான விட­யங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கலா­சாரம், பண்­பாடு, பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்­பா­கவும் கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.
எனினும் சம­கா­லத்தில் மலை­யக மக்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள பண்­பாடு, கலா­சாரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பான மாற்­றத்­தி­னையும் ஒட்­டு­மொத்­த­மாக பார்க்க முடி­யாத ஒரு நிலையில் இருக்­கின்றோம். துறை­சார்ந்த நிபு­ணர்கள், துறை­சார்ந்த ஆர்­வ­லர்கள் குறித்த விட­யங்­களை அறிந்து கொள்­வ­திலும் சிக்கல் நிலை மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. சமூ­கத்தில் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­கின்ற நிலையில் இந்த மாற்­றங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்­டி­யதும், இடர்­பா­டு­களை களைந்து அபி­வி­ருத்­திக்கு இட்டுச் செல்ல வேண்­டி­யதும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக விளங்­கு­கின்­றது.
மலை­யக மக்­களின் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் காலத்­துக்கு காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் ஊடாக நாம் பல்­வேறு விட­யங்­க­ளையும் விளங்கிக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். வருடா வருடம் இத்­த­கைய ஆய்­வு­களை மேற்­கொள்ள முடி­யா­விட்­டாலும் குறிப்­பிட்ட ஒரு காலப்­ப­கு­தியை மையப்­ப­டுத்தி இந்த ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். ஆய்­வுகள் செய்து அபி­வி­ருத்தி செய்வோம் என்­பது ஒரு தொனிப்­பொ­ரு­ளாகும். வர­லாற்றைப் பார்த்து முன்­னோக்கிச் செல்வோம் என்­பதும் ஒரு முக்­கி­ய­மான கருத்­தாகும். இந்த நிலைகள் உரி­ய­வாறு கடைப்­பி­டிக்­கப் ­ப­டுதல் வேண்டும். ஆய்வு என்­பது சகல மட்­டங்­க­ளிலும் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்­றது. உலக நாடுகள் பல­வற்றில் சமூகம் குறித்த கருத்துப் பரி­மா­றல்­க­ளுக்கு கள­மாக ஆய்வு அமைந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை மறுத்­து­விட முடி­யாது.
யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இடம்­பெறும் ஆய்­வுகள் பலவும் சமூக ரீதியில் புதிய பரி­மா­ணங்கள் பல­வற்­றையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமை­கின்­றது என்­பதே உண்­மை­யாகும். இந்­தி­ய­ வம்­சா­வளி மலை­யக சமூ­கத்­தினர் இன்று பதி­னைந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் உள்­ளனர்.
எனினும் துறை­சார்ந்த நிபு­ணர்­களை இனங்­காண்­ப­தற்கோ சம­கால பார்­வை­யினை செலுத்­து­வ­தற்கோ போது­மான தர­வுகள் எம்­மிடம் இல்லை. எனவே ஆய்­வுத்­து­றையை வளர்த்­தெ­டுக்க வேண்­டி­ய­தென்­பது மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. மேற்­கத்­தேய நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் கருத்­த­ரங்கு, கலந்­து­ரை­யா­டல்கள், ஆய்­வுகள் என்­பன அடிக்­கடி இடம்­பெற்று வரு­கின்­றன. சாதக, பாதக விளை­வுகள் ஆரா­யப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய நிலை­மைகள் சமூக அபி­வி­ருத்­திக்கு உந்து சக்­தி­யாக அமைந்து வரு­கின்­றன.
மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு நடத்­தப்­பட வேண்­டு­மென்று பேரா­சி­ரியர் தனராஜ் போன்­ற­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். தனராஜ் கல்விப் புலத்தில் நீண்ட கால அனுபவமுள்ள ஒருவர். தேசிய சர்வதேச மாநாடுகள் பலவற்றிலும் அவர் பங்கேற்றுள்ளார். எனவே இந்த நிலையில் மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு ஒன்­றினை நடத்­து­வது குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். பல்­வேறு ஆய்­வு­கள் சமூ­கத்தின் மேம்­பாட்­டுக்கும் அபி­வி­ருத்­திக்கும் பக்­க­ப­ல­மாகும் என்­ப­தனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நன்றி- வீரகேசரி

பால்பண்ணையாளர்கள் சங்கம்

Etnuypah kw;Wk; mk;gfKt gpuNjr ghy; gz;izahsu;fis cs;slf;fp rq;fnkhd;iw mq;Fuhu;gzk; nra;atpUg;gjhf njhptpj;j ,e;jpa tk;rhtsp kf;fs; Kd;ddpapd; gpujp jiytu; R.g.Rg;gpukzpak; %ytsq;fspd; cr;r gad;ghl;bd; %yk; Etnuypah khtl;lj;jpy; jythf;fiy> nfhl;lfiy kw;Wk; mk;gfKt Mfpa gpuNjrq;fspy; fhy;eil Jiwapy; mgptpUj;jpia cWjpg;gLj;Jtjw;F nghJkf;fis Cf;fg;gLj;j Ntz;Lk; vd;whH.

fle;j 03-08-2016 md;W nfhl;lfiyapy; ghy;gz;izahsu;fs; rq;fnkhd;iw mikg;gJ njhlHghf  gz;izahsu;fis re;jpj;Jf; fUj;J njhptpj;j R.g.Rg;gpukzpak; Etnuypah khtl;lj;jpy; fhy;eilfis tsu;f;f $ba mjpfkhd tsq;fs; fhzg;gLfpd;wJ. Njrpa fhy;eil mgptpUj;jp rig kw;Wk; jdpahu; ghy; cw;gj;jpahsu;fs; Clhf fpilf;fg;ngWk; cr;r fl;l gyd;fs;> fle;j rpy tUlq;fshf fhy;eil tsu;g;ghsu;fis nrd;wilatpy;iy.
Njrpa fhy;eil mgptpUj;jp rig mur tptrha $l;Ljhgd rl;lj;jpd; fPo; 1973Mk; Mz;by; cUthf;fg;gl;lJ. mjd; ntspf;fs eltbf;iffs; 1974Mk; Mz;L Muk;gpf;fg;gl;lJ. md;W njhlf;fk; kiyaf kf;fs; cs;spl;l ehl;by; midj;Jg; gpuNjr kf;fSk; nghUshjhu epiyikfis Nkk;gLj;j fhy;eil cw;gj;jp kw;Wk; ghy; cw;gj;jp mikg;Gfs; Clhf nraw;gl;lJ.  Njhl;lj; Njapiy njhopiy khj;jpuk; ek;gpapUf;Fk; njhopyhsu;fs; jq;fsJ tho;thjhuj;ij cWjp nra;Ak; nghUl;L Ranjhopyhf fhy;eil tsu;g;ig Nkw;nfhz;ldu;. ,Ue;Jk; fle;j fhyq;fspy; fhy;eil tsu;g;G mUfp tUfpd;wJ. ,e;j epiyapy; Njhl;lg; gFjpfs; kw;Wk; ngUe;Njhl;l fpuhkg;gFjpfspy; ghy; cw;gj;jp kpfTk; Fiwtile;J tUfpd;wJ vdf;Fwpg;gpl;lhH.


,e;j tplak; njhlHghf mk;gfKt gpuNjr kw;Wk; Etnuypah gpuNjrj;jpy; ghy; gz;izahsu;fSf;F cjtpfis ngw;Wf;nfhLf;f rq;fk; xd;W ,y;yhjjd; fhuzkhfNt jdpkdpj Nghuhl;lj;Jf;F jhk; MshfptUtjhf ghy; gz;izahsu;fs; njuptpf;fpd;wdu;  vdf; Fwpg;gpl;lhu;. MfNt> gpuNjr gz;izahsu;Sf;fhf tpiutpy; rq;fk; xd;iw mq;Fuhg;gzk; nra;ag;NghtjhfTk; mt;thW Muk;gpf;fg;gLk; rq;fj;jpd; Clhf fhy;eil tsu;f;f $ba gapw;rpfs; tsq;fis ghJfhf;f $ba topKiwfs; ghy; cw;gj;jpia> ngUf;f $ba etPd Ntiyj;jpl;lq;fs; Gjpa njhopy;El;g Kiwfs;> Cf;Ftpg;Gfs;>  fhy; eil tsu;g;gjpy; Mu;tj;jpid J}z;b Ranjhopiy Nkw;nfhs;Sk; mstpyhd gapw;rpfs; kw;Wk; fz;fhl;rpfs; Nghd;wtw;iw elhj;j murhq;f kl;lj;jpy; eltbf;if Nkw;nfhs;sg;gLk;. ,jw;nfd fhy;eil cw;gj;jp Rfhjhu jpizf;fsk; kw;Wk; fhy;eilts mikr;R kw;Wk; r%f mgptpUj;jp mikr;R Mfpatw;wpd; cjtpfis ngUtjw;fhd eltbf;iffs; Kd;ndLf;fg;gl;Ls;sjhfTk; Rg;gpukzpak; Fwpg;gpl;lhH.

நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி

இடைக்கால கொடுப்பனவான 2,500 ரூபாயை முழுமையாகப் பெற வேண்டுமெனில், ஒரு தொழிலாளி கட்டாயமாக  25 நாட்களுக்கு வேலை செய்திருக்க வேண்டும். எந்தக் கம்பனி, தொழிலாளிகளுக்கு 25 நாட்கள் வேலை வழங்குகின்றது' என்று கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கணபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாயை பெற்றுக்கொடுத்துவிட்டோம். இதற்காக முதல் முறையாக அரச திறைச்சேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் வெற்றியாகும் என சிலர் கூறித்திரிகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக சொல்லப்படுகின்ற 2,500 ரூபாய் என்பது சம்பள உயர்வல்ல.   இடைக்கால கொடுப்பனவு மாத்திரமே என்பதை தொழிலாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அதிலும், தொழிலாளி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தோடு 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாக வழங்கும் எந்த ஏற்பாடும் கிடையாது. மாறாக நாளுக்கு 100 ரூபாய்தான் வழங்கப்படும்' எனவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, 'இடைக்கால கொடுப்பனவை மாபெரும் சாதனையாகக்காட்டி அரசியல் இலாபத்தை அறுவடைச் செய்யத்துடிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர்,  2,500 ரூபாய் ஒரிரு மாதங்களுக்கு மட்டுமே   தொழிலாளருக்கு கிடைக்கும் என்பதை சொன்னால் சிறப்பாக இருக்கும். 

தனியார்த்துறை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டும் என சட்டம் இயற்றிய மார்ச் மாதத்திலிருந்து, இம்மாதம் வரையிலான நிலுவையையும் இணைத்து தோட்டத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும்' என்றார். 'நல்லாட்சிக்காரருக்கு வாக்குகளை வாரி வழங்கிய பெருந்தோட்டத் தொழிலாளருக்கு, 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாகவும் நிரந்தரமாகவும் வழங்க அரசாங்கம் மறுப்பதால் தோட்டத் தொழிலாளர்களை பாரபட்சமாக நடத்துவது அம்பலமாகியுள்ளது. அத்துடன், நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் இயலாமையும் அம்பலத்துக்கு  வந்துள்ளது' என அவர் கூறினார்.