தோட்ட மக்களை இ.தொ.கா புறக்கணிக்காது – பிரதி கல்வியமைச்சர் சச்சிதானந்தன்
சப்ரகமுவ மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோல்வியையடுத்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் இ.தொ.கா சப்ரகமுவ மாகாண மக்களை ஒருபோது கைவிடாது என்று தெரிவித்த அமைச்சர் மலையகத்தில் ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களை இணைத்து கல்வி, கலாச்சார ரீதியாக முக்கோண வடிவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும். வௌ;வேறு மாகாணங்கள் என பாகுபாடு காட்டாது. குறிப்பாக ஆசிரியர் நியமனம், சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனம், அதிபர் – ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் என எந்த விடயத்திலும் மாகாண ரீதியாக பாகுபாடு காட்டாது இ.தொ.கா பொதுவாக ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு வந்திருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்பின் 13வது சீர்திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதன் மூலம் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, கலாச்சாரத்துக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும். சப்ரகமுவ மாகாண மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்ததன் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கும் நிதியை கோட்டை விட்டு விட்டார்கள் என்றார்.
தரிசு நிலங்களில் விவசாயம் செய்த தொழிலாளர்கள் வேலை நீக்கம்
வெலிமடை - ஹக்கலை தோட்டத்தில் தேயிலை பயிர்செய்கைக்கு பொருத்தமற்றதென தோட்ட நிர்வாகத்தினால் கைவிடப்பட்டிருந்த தரிசு நிலத்தில் விவசாயம் செய்த தோட்டத் தொழிலாளர்கள் 15 பேர் தோட்ட நிர்வாகத்தினால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதேவேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வெளியார் பலர் அத்துமீறி இதே தோட்டத்தின் தரிசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதுடன் பயிர்செய்யையும் மேற்கொள்வதோடு மாடி வீடுகளையும் நிர்மாணித்து வாழ்கின்றனர். தோட்டத்திற்காக பாடுபடும் தொழிலாளர்கள் இவ்வாறு விவசாயம் செய்தமை குறித்து தொழிலாளர்கள் தரப்புக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஹக்கலை தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பண்டாரவளை தொழில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தோட்ட நிர்வாகங்கள் பெருமான்மையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருப்பதேன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. வறுமை நிலை காரணமாக தரிசு நிலங்களில் விவசாயம் செய்வது எப்படி குற்றமாகும்? தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றதா என்று நீதிமன்றில் கேள்வி எழுப்பினார் தொழிலுறவு அதிகாரியும், சட்டவல்லுநருமான ஆர் சுப்பிரமனியம்.
Wednesday, September 17, 2008
Tuesday, September 16, 2008

கொழும்பு ஹோர்டன் பிளேஸில் பஸ் வண்டியில் குண்டு வெடிப்பு நால்வர் காயம்
கொழும்பு மட்டக்குளியிலிருந்து மொரட்டுவ நோக்கிச் சென்ற 155 இல இ.போ.ச பஸ் வண்டியில் இன்று பிற்பகல் (16-09-2008) குண்டு வெடித்ததில் நால்வர் காயங்களுக்குள்ளானார்கள். இச் சம்பவம் கொழும்பு நகர மண்டபத்திற்கு அண்மையில் ஹோர்ட்டன் சுற்றுவட்ட பகுதியிலேயே இடம்பெற்றது. இந்த பஸ் வண்டியில் சுமார் 60 பேர் பயணித்தாகவும் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று இருப்பதை கண்ட பஸ் சாரதி அவசரமாக பயணிகளை இறக்கிய சிறிது நேரத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Monday, September 15, 2008
டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
கேகாலை மாவட்டம் ருவான்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகறாறு காரணமாக சிங்களவர் ஒருவர் கத்திக்குத்து இலக்காகி மரணமானார். இதனையடுத்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தோட்டக்குடியிருப்புக்களின் மீது கற்களை வீசி தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த தோட்டப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை சூறையாடி சென்றுள்ளனர். இதனால் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் அருகிலுள்ள தோட்டங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். தற்காலிகமாக உறவினர்கள் தங்கியுள்ள இவர்கள் இரண்டு நாட்களாக எதுவித பசி பட்டிணியால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கடைகளில் இவர்களுக்கு பொருட்கள் விற்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்படலாம் என இவர்கள் அஞ்சுகிறார்கள். தற்போது சமாதானக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறுவர்களை மூலதனமாக வைத்து பிழைக்கும் தரகர் கூட்டம்
தோட்டப் பகுதிகளில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் முழுமையாக சமூக மேம்பாட்டுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பள்ளி செல்லும் வயதில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதிலிருந்து தடுத்து அவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வு தருவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இதற்கு பல துறைசார்ந்த அனைத்து பெரியார்களும் ஒன்று திரண்டு சிறந்ததோர் சிறுவர் உலகை உருவாக்க முன்வர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு அமரர் இரா சிவலிங்கத்தின் 9ம் ஆண்டு நினைவு பேருரை நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம் வாமதேவன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தூரத்திலிருந்து நோக்கும் போது மலையகம் பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவே தெரிகிறது. இது வெறும் மாயை. நெருங்கி பார்க்கும் போதுதான் உண்மை தெரியும். 14 வயதுவரை கட்டாயக் கல்வி நாட்டின் சட்டத்தில் உள்ளன. மலையகத்தில் இதற்கு முரணாகவே இருக்கிறது. 85சத வீத சிறுவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். 15 சதவீதம் இடைநடுவில் படிப்பை கைவிட்டு எவ்வித தொழிலுக்கும் செல்லாமல் வெறுமனே சுற்றித்திரிந்து பல்வேறு சடூமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாகின்றனர். நகர் புறங்களில் வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிற்றூழியம் செய்வதற்கு தோட்டப்புற சிறுவர்களை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடிகிறது. மூலதனம் இல்லாமல் வயிறு வளர்ப்பதற்கு சிறுவர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல பெரும் தரகர் கூட்டமொன்றே இயங்கி வருகிறது. கல்வி கற்கும் வயதில் சிறுவர் சிறுமியர் அதிலிருந்து திசை திருப்பப்பட்டு பலவித துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுவது மலையக சமூகத்தின் எதிர்கால மேம்பாட்டுக்கு பாரியதோர் சாபக்கேடாக மாறியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டியது அவசர – அவசிய தேவையாகும் என்றார்.
கண்டி கச்சேரியில் தமிழ் மொழி பணியாளர்கள் எததனை பேர்- அமைச்சர் மகிந்த சமரசிங்க
தமிழ் மொழியும் இந் நாட்டின் அரச கரும மொழியாக சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கண்டி கச்சேரியில் தமிழ் மொழியில் தமிழ் மக்களோடு பணியாற்றக் கூடியவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கேள்வி எழுப்பினார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க. அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் இல்லாமல் செயல் பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் சமாதானமும் ஐக்கியமும் நிலவும் என்றார். டிசம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புத் தினத்தை கண்டியில் நடத்துவது தொடர்பாக கண்டி கச்சேரி மாவட்ட செயலாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பி;ட்டார். மேலும் உரையாற்றுகையில் தமிழ் மொழியில் கருமமாற்றக் கூடியவர்கள் இல்லையென்றால் தோட்டப்பிரதேச மக்களுக்கு சேவை செய்வது எவ்வாறு? அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மதித்து அவற்றை வழங்காவிட்டால் நெருக்கடிகளும், ஒற்றுமையின்மையும், பிரிவினை பேதங்களும் ஏற்படும் என்றார்.
கேகாலை மாவட்டம் ருவான்வெல டெஸ்டர்போர்ட் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகறாறு காரணமாக சிங்களவர் ஒருவர் கத்திக்குத்து இலக்காகி மரணமானார். இதனையடுத்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தோட்டக்குடியிருப்புக்களின் மீது கற்களை வீசி தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த தோட்டப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களை சூறையாடி சென்றுள்ளனர். இதனால் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் அருகிலுள்ள தோட்டங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். தற்காலிகமாக உறவினர்கள் தங்கியுள்ள இவர்கள் இரண்டு நாட்களாக எதுவித பசி பட்டிணியால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கடைகளில் இவர்களுக்கு பொருட்கள் விற்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்படலாம் என இவர்கள் அஞ்சுகிறார்கள். தற்போது சமாதானக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சிறுவர்களை மூலதனமாக வைத்து பிழைக்கும் தரகர் கூட்டம்
தோட்டப் பகுதிகளில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் முழுமையாக சமூக மேம்பாட்டுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பள்ளி செல்லும் வயதில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதிலிருந்து தடுத்து அவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வு தருவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இதற்கு பல துறைசார்ந்த அனைத்து பெரியார்களும் ஒன்று திரண்டு சிறந்ததோர் சிறுவர் உலகை உருவாக்க முன்வர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு அமரர் இரா சிவலிங்கத்தின் 9ம் ஆண்டு நினைவு பேருரை நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எம் வாமதேவன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தூரத்திலிருந்து நோக்கும் போது மலையகம் பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவே தெரிகிறது. இது வெறும் மாயை. நெருங்கி பார்க்கும் போதுதான் உண்மை தெரியும். 14 வயதுவரை கட்டாயக் கல்வி நாட்டின் சட்டத்தில் உள்ளன. மலையகத்தில் இதற்கு முரணாகவே இருக்கிறது. 85சத வீத சிறுவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். 15 சதவீதம் இடைநடுவில் படிப்பை கைவிட்டு எவ்வித தொழிலுக்கும் செல்லாமல் வெறுமனே சுற்றித்திரிந்து பல்வேறு சடூமூகப் பிரச்சினைகளுக்கு காரணமாகின்றனர். நகர் புறங்களில் வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிற்றூழியம் செய்வதற்கு தோட்டப்புற சிறுவர்களை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடிகிறது. மூலதனம் இல்லாமல் வயிறு வளர்ப்பதற்கு சிறுவர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல பெரும் தரகர் கூட்டமொன்றே இயங்கி வருகிறது. கல்வி கற்கும் வயதில் சிறுவர் சிறுமியர் அதிலிருந்து திசை திருப்பப்பட்டு பலவித துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுவது மலையக சமூகத்தின் எதிர்கால மேம்பாட்டுக்கு பாரியதோர் சாபக்கேடாக மாறியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டியது அவசர – அவசிய தேவையாகும் என்றார்.
கண்டி கச்சேரியில் தமிழ் மொழி பணியாளர்கள் எததனை பேர்- அமைச்சர் மகிந்த சமரசிங்க
தமிழ் மொழியும் இந் நாட்டின் அரச கரும மொழியாக சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கண்டி கச்சேரியில் தமிழ் மொழியில் தமிழ் மக்களோடு பணியாற்றக் கூடியவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கேள்வி எழுப்பினார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க. அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் இல்லாமல் செயல் பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் சமாதானமும் ஐக்கியமும் நிலவும் என்றார். டிசம்பர் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புத் தினத்தை கண்டியில் நடத்துவது தொடர்பாக கண்டி கச்சேரி மாவட்ட செயலாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பி;ட்டார். மேலும் உரையாற்றுகையில் தமிழ் மொழியில் கருமமாற்றக் கூடியவர்கள் இல்லையென்றால் தோட்டப்பிரதேச மக்களுக்கு சேவை செய்வது எவ்வாறு? அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மதித்து அவற்றை வழங்காவிட்டால் நெருக்கடிகளும், ஒற்றுமையின்மையும், பிரிவினை பேதங்களும் ஏற்படும் என்றார்.
மின்சார ஒழுக்கினால் தொடரும் அகதி வாழ்வு
தொழிலாளர்களின் குடியிருப்பு லயன்களில் இணைக்கப்பட்டுள்ள மின்சார ஒழுக்கில் லயன்கள் எரிவதும் அங்கு குடியிருக்கும் மக்கள் அகதிகளாகுவதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களில் உடைமைகள், ஆவணங்கள், தாங்கள் சேர்த்து வைத்துள்ளவைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக
பத்தனை மவுன்ட்வேர்ணன் மேற்பிரிவில் - 20 குடும்பங்கள் நான்கு வருடங்களாகவும், மடக்கும்பரை புதுக்காடு – 20 குடும்பங்கள் 19 மாதங்களாகவும், மன்றாசி என்பீல்ட் - 24 குடும்பங்கள் 11 மாதங்களாகவும், பொகவந்தலாவ சென் ஜோன் டில்லரி 09 குடும்பங்கள் 12 மாதங்களாகவும், கொட்டக்கலை பளிங்குமலை – 20 குடும்பங்கள் 20 மாதங்களாகவும் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இவர்கள் எவ்வித அடிப்படை தேவைகளும் இல்லாது தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான விபத்துக்களுக்கு அரசியல்வாதிகளும், தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை பெறல், முறையான மின்சார இணைப்பை கொண்டிருக்காமை போன்ற காரணிகள் ஆகும். இதற்கு மின்சார சபையும் பொறுப்பேற்க வேண்டும். எதிர் வரும் காலங்களில் இவ்வாறு அகதிகளாக வாழும் மக்களுக்கு உரிய வீட்டு வசதிகள் செய்து கொடுக்கவும், முறையான மின்சார வசதியை வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.
தொழிலாளர்களின் குடியிருப்பு லயன்களில் இணைக்கப்பட்டுள்ள மின்சார ஒழுக்கில் லயன்கள் எரிவதும் அங்கு குடியிருக்கும் மக்கள் அகதிகளாகுவதும் தொடர் நிகழ்வாகிவிட்டது. இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களில் உடைமைகள், ஆவணங்கள், தாங்கள் சேர்த்து வைத்துள்ளவைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக
பத்தனை மவுன்ட்வேர்ணன் மேற்பிரிவில் - 20 குடும்பங்கள் நான்கு வருடங்களாகவும், மடக்கும்பரை புதுக்காடு – 20 குடும்பங்கள் 19 மாதங்களாகவும், மன்றாசி என்பீல்ட் - 24 குடும்பங்கள் 11 மாதங்களாகவும், பொகவந்தலாவ சென் ஜோன் டில்லரி 09 குடும்பங்கள் 12 மாதங்களாகவும், கொட்டக்கலை பளிங்குமலை – 20 குடும்பங்கள் 20 மாதங்களாகவும் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இவர்கள் எவ்வித அடிப்படை தேவைகளும் இல்லாது தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான விபத்துக்களுக்கு அரசியல்வாதிகளும், தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை பெறல், முறையான மின்சார இணைப்பை கொண்டிருக்காமை போன்ற காரணிகள் ஆகும். இதற்கு மின்சார சபையும் பொறுப்பேற்க வேண்டும். எதிர் வரும் காலங்களில் இவ்வாறு அகதிகளாக வாழும் மக்களுக்கு உரிய வீட்டு வசதிகள் செய்து கொடுக்கவும், முறையான மின்சார வசதியை வழங்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய தூதரக உதவியுடன் 750 ஆசிரியர்களுக்கு பயிற்சி
மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு இந்திய உதவித் தூதரகத்தின் உதவியுடன் கடந்த மூன்று வருட காலத்தில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 750 ஆசிரியர்களுக்கு குறுகியகால ஆசிரிய பயிற்சிகளை வழங்கியுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்துள்ளார். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கே இந்திய கல்வி நிபுணர்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு இந்திய உதவித் தூதரகத்தின் உதவியுடன் கடந்த மூன்று வருட காலத்தில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 750 ஆசிரியர்களுக்கு குறுகியகால ஆசிரிய பயிற்சிகளை வழங்கியுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி தெரிவித்துள்ளார். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கே இந்திய கல்வி நிபுணர்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Sunday, September 14, 2008
றுவான்வெல தோட்டத்தில் மோதல் ஒருவர் பலி மக்கள் அச்சத்தில் கோவில்களில் தஞ்சம்
றுவான்வெல செஸ்ரபோர்ட் தோட்டத்தில் நேற்று முன்தினம் (13-09-2008) சனிக்கிழமை தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறினால் சிங்களவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமானார். இதையடுத்து நேற்றுக் காலை அந்தத் தோட்டத்திற்கு திரண்டு வந்த சிங்களவர்கள் தமிழர்கள் மீது மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதனால் படுகாயமடைந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் றுவான்வெல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் இந்தத் தாக்குலில் காயமடைந்துள்ளனர். இத் தோட்டத்திலுள்ள 80குடும்பங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். பெண்கள் அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும் ஆண்கள் றப்பர் தோட்டங்களினுள்ளும் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு மூன்று தமிழர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிறப்பத்தாட்சிப் பத்திரம் பெற இ.தொ.கா ஏற்பாடு
பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் மலையக தோட்டத் தொழிலாளர்களில் 30 சதவீதமானவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. மலையக தோட்டத் தொழிலாளர்களில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி,பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யும் பொருட்டு, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மற்றும் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியா ஆகியோரின் ஒப்புதலுடன், அமைச்சரவை பத்திரமொன்று அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாத காலத்தினுள் விசேட ஏற்பாட்டின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து தோட்ட மக்களுக்கும் அவர்களது பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் பதிவு செய்யப்படாத பிறப்புகள், தேடிக் கண்டு பிடிக்க முடியாத பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை புதிதாகப் பதியவும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இது குறித்து அறிவுத்தும் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை காலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழிற் கூடத்தில் நடைபெற்றபோது கொழும்பு பதிவாளர், திணைக்கள அதிகாரிகள், ட்ரஸ்ட் நிறுவன அதிகாரி, இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாதவர்கள், தத்தமது தோட்ட குடும்பநல அதிகாரிகளை அணுகி தமது விபரங்களை கையளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். முதலில் தோட்டத் தொழிலாளர்கள் தமது விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கு புறம்பான படிவமொன்று விநியோக்கப்பட்டுள்ளது.
றுவான்வெல செஸ்ரபோர்ட் தோட்டத்தில் நேற்று முன்தினம் (13-09-2008) சனிக்கிழமை தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறினால் சிங்களவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமானார். இதையடுத்து நேற்றுக் காலை அந்தத் தோட்டத்திற்கு திரண்டு வந்த சிங்களவர்கள் தமிழர்கள் மீது மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதனால் படுகாயமடைந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் றுவான்வெல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் இந்தத் தாக்குலில் காயமடைந்துள்ளனர். இத் தோட்டத்திலுள்ள 80குடும்பங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். பெண்கள் அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும் ஆண்கள் றப்பர் தோட்டங்களினுள்ளும் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு மூன்று தமிழர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிறப்பத்தாட்சிப் பத்திரம் பெற இ.தொ.கா ஏற்பாடு
பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் மலையக தோட்டத் தொழிலாளர்களில் 30 சதவீதமானவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. மலையக தோட்டத் தொழிலாளர்களில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி,பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யும் பொருட்டு, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மற்றும் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியா ஆகியோரின் ஒப்புதலுடன், அமைச்சரவை பத்திரமொன்று அண்மையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மாத காலத்தினுள் விசேட ஏற்பாட்டின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து தோட்ட மக்களுக்கும் அவர்களது பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் பதிவு செய்யப்படாத பிறப்புகள், தேடிக் கண்டு பிடிக்க முடியாத பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை புதிதாகப் பதியவும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இது குறித்து அறிவுத்தும் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை காலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை காங்கிரஸ் தொழிற் கூடத்தில் நடைபெற்றபோது கொழும்பு பதிவாளர், திணைக்கள அதிகாரிகள், ட்ரஸ்ட் நிறுவன அதிகாரி, இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் இல்லாதவர்கள், தத்தமது தோட்ட குடும்பநல அதிகாரிகளை அணுகி தமது விபரங்களை கையளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். முதலில் தோட்டத் தொழிலாளர்கள் தமது விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்கு புறம்பான படிவமொன்று விநியோக்கப்பட்டுள்ளது.
Saturday, September 13, 2008
மலையக மக்களைப் பாதிக்கும் தேசிய அடையாள அட்டைப் பிரச்சினை
மலையக மக்களுக்கு வாக்குரிமை இருந்தும்; அவர்களில் கணிசமானோர் அந்த உரிமையைத் தேர்தல்களில் பயன்படுத்த இயலாதவர்களாக உள்ளனர். தேசிய அடையாள அட்டை இல்லாமையே இதற்குப் பிரதான காரணம். நடந்து முடிந்த வட மத்திய, சப்ரகமுக மாகாணசபை தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டையைக் கட்டாயமாக்கும் நிபந்தனையை நீக்குமாறு கோரிக்கை விடுப்பது இதற்குப் பரிகாரமாகாது. வருடத்திற்கொருமுறை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதை பெருந்தோட்ட மக்களோ அல்லது அம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைத்துவங்களோ இதில் அக்கறை காட்டவேண்டும். இதற்காக குறைந்தது வருடத்தில் ஐந்து நாட்களை ஒதுக்கினாலே போதும் இம் மக்களில் பெரும்;பாலானோர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக ஆக்கப்படுவார்கள். பிரசாவுரிமை வாக்குரிமை இருந்தால் மட்டும் போதாது. அவற்றின் பலனை அனுபவிக்கவும் அதனை சரிவர பயன்படுத்தவும் அந்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அம் மக்களினதும் சமூகப் பிரதிநிதிகளை சார்ந்த விடயமாகும்.
இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்
இறப்பர் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மழை காலங்களில் தங்கள் இறப்பர் பால் வெட்டும் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளனர். கடந்த சில வாரங்களாக இரத்தினபுரி போன்ற பகுதிகளில் கடுமையான மழை காரணமாக அப்பகுதி தொழிலாளர்களுக்கு தோட்டக் கம்பனிகள் வேலை வழங்காததால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின்படி மாதத்தில் 25 நாட்கள் வேலைக்கு சென்றால் மாத்திரமே அவர்களுக்கான முழுமையான நாட்சம்பளம் கிடைக்கும் இவர்களுக்கு வேலை வழங்கப்படாவிட்டால் அடிப்படையில் சம்பளம் குறைக்கப்படுகின்றது. எனவே தோட்டக் கம்பனிகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலையக மக்களுக்கு வாக்குரிமை இருந்தும்; அவர்களில் கணிசமானோர் அந்த உரிமையைத் தேர்தல்களில் பயன்படுத்த இயலாதவர்களாக உள்ளனர். தேசிய அடையாள அட்டை இல்லாமையே இதற்குப் பிரதான காரணம். நடந்து முடிந்த வட மத்திய, சப்ரகமுக மாகாணசபை தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டையைக் கட்டாயமாக்கும் நிபந்தனையை நீக்குமாறு கோரிக்கை விடுப்பது இதற்குப் பரிகாரமாகாது. வருடத்திற்கொருமுறை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதை பெருந்தோட்ட மக்களோ அல்லது அம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைத்துவங்களோ இதில் அக்கறை காட்டவேண்டும். இதற்காக குறைந்தது வருடத்தில் ஐந்து நாட்களை ஒதுக்கினாலே போதும் இம் மக்களில் பெரும்;பாலானோர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக ஆக்கப்படுவார்கள். பிரசாவுரிமை வாக்குரிமை இருந்தால் மட்டும் போதாது. அவற்றின் பலனை அனுபவிக்கவும் அதனை சரிவர பயன்படுத்தவும் அந்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அம் மக்களினதும் சமூகப் பிரதிநிதிகளை சார்ந்த விடயமாகும்.
இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்
இறப்பர் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மழை காலங்களில் தங்கள் இறப்பர் பால் வெட்டும் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளனர். கடந்த சில வாரங்களாக இரத்தினபுரி போன்ற பகுதிகளில் கடுமையான மழை காரணமாக அப்பகுதி தொழிலாளர்களுக்கு தோட்டக் கம்பனிகள் வேலை வழங்காததால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின்படி மாதத்தில் 25 நாட்கள் வேலைக்கு சென்றால் மாத்திரமே அவர்களுக்கான முழுமையான நாட்சம்பளம் கிடைக்கும் இவர்களுக்கு வேலை வழங்கப்படாவிட்டால் அடிப்படையில் சம்பளம் குறைக்கப்படுகின்றது. எனவே தோட்டக் கம்பனிகளுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)